Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே முதல் முறையாம்.. திமுக தேர்தல் அறிக்கைக்கு AI மூலம் கருத்து தெரிவிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களிடம் தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க திட்டமிட்டுள்ளது. AI மூலம் கருத்து தெரிவிப்பது எப்படி என்பது குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம் அளித்தார்.

திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எல்லார்க்கும் எல்லாம் என்ற சீரிய சிந்தனையோடு ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன், முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன், எம்.எம். அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்திருந்தார்.

DMK Turns to AI for Manifesto Inputs Stalin Launches special App

இக்குழுவினர் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர்.

துவக்க நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.02.2026 சனிக்கிழமை) கழகத் தலைவர் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். பொது மக்கள் கீழ்கண்ட தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கழகத்திற்கு வழங்கலாம்.

தொலைபேசி: 08069446900
வாட்ஸ் அப் (WhatsApp): 9384001724
மின்னஞ்சல் : [email protected]
இணையதளம்: http://www.dmk.in/ta/manifesto2026
சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26
செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai

2021 திமுக தேர்தல் அறிக்கையில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம். வாக்குறுதிகளில் இது 80 சதவீதம்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதம் ஆகும்.

மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் மத்திய பாஜக அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது போன்ற வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகள் ஆகும்.

64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உள்ளது. உள்ளூர் போராட்டங்கள்-ஒத்துழைப்பின்மை, தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படாமலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு.

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி (கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் இல்லம் அருகே கற்பிக்கும் திட்டம்), எண்ணும் எழுத்தும் திட்டம் (எட்டு வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி படிப்பதும், எழுதுவதும் உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம்), புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நாம் முதல்வன், திறனறித் தேர்வுத் திட்டம் (10 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றால் கல்லூரிக் கல்வி வரை மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம்), தோழி விடுதி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம்,

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், கலைஞரின் கனவு இல்லம், மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரை கட்டணத்தில் 1 சதவீதம் சலுகை, மகளிர் பெயரில் மட்டுமே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீடு, உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் வாக்குறுதியாக சொல்லப்படாதவை.

தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 அரசுக்கான தேர்தல் அறிக்கையை முனைப்புடன் தயாரித்து வருகிறது கழகம். திராவிடமாடல் 2.0 அரசில் மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை, பரிந்துரைகளை வழங்கி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் எல்லோரும் பங்கு பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI மூலம் கருத்து தெரிவிப்பது எப்படி?

AI மூலம் கருத்து தெரிவிப்பது எப்படி என்பது குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம் அளித்தார். "tnmanifesto.ai என்ற AI இணையப்பக்கத்தை திறந்தால், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை தேர்வு செய்யலாம். பின்னர் சுய விவரங்களைச் சேர்த்து, தேர்தல் அறிக்கைக்கு கருத்துகளைச் சேர்க்கலாம்.

வழக்கமாக, ஒரு படிவம் கொடுத்து அதை நிரப்பச் சொல்வார்கள். இந்த AI-யில், குரல் பதிவு செய்யலாம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில், அல்லது இரண்டு மொழிகளிலும் கலந்து பேசினால் அதனை இந்த AI முழுதாக உள்வாங்கிக் கொண்டு தேர்தல் அறிக்கைக்கான கருத்தாக பதிவு செய்துகொள்ளும். தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் அதனையும் செய்து கொள்ளலாம்.

ஏதாவது அமைப்புகள், குழுக்கள் ஆகியவை கோரிக்கைகளை பெரிய பட்டியலாக வைத்திருப்பார்கள். அவர்கள் pdf அப்லோடு செய்தால் அதனை ஸ்கேன் செய்து, தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்களாக பாயிண்ட் பாயிண்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். கையால் எழுதி புகைப்படம் எடுத்தும் அப்லோடு செய்யலாம். உலகிலேயே முதல் முறையாக தேர்தல் அறிக்கைக்கு AI மூலமாக கருத்து கேட்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+