கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க..!
சென்னை: கிரெடிட் கார்டை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அது பயன் தரும். ஆனால் கிரெடிட் கார்டை சில இடங்களில் தேவை இல்லாமல் பயன்படுத்தவே கூடாது. அதேபோல் கிரெடிட் கார்டில் சில சிக்கல்களும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.
கிரிடிட் கார்டு இன்றைக்கு பலரும் பயன்படுத்தும் கருவியாகிவிட்டது. அவசரத்திற்கு முன்பு பக்கத்து வீடுகளில் கைமாற்றாக பணத்தை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது அந்த வேலையை வங்கிகள் கிரெடிட் கார்டு மூலம் செய்கின்றன. ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் பக்கத்து வீட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை கொடுக்க முடியாவிட்டால் தள்ளி போட கேட்கலாம். ஆனால் வங்கிகள் அப்படி அல்ல, வட்டி விதிக்கின்றன.

கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி கொண்டு வட்டி இல்லாமல் 45 நாட்கள் கழித்து கட்ட முடியும். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் நீங்கள் பணத்தை கட்டாமல் விட்டால், வட்டி அதிகமாக விதிப்பார்கள். பிராஸசிங் பீஸ், வட்டி , அபராதம் என தொகை என அதிகமாக இருக்கும்.
கிரெடிட் கார்டு என்பது கடன் வலையில் மக்களை சிக்க வைக்கும் அபாயம் இருப்பதால், தயவு செய்து யாருக்கெல்லாம் கடன் சுமை அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டு வைக்க வேண்டாம்.
இயல்பாகவே அதிகமாக பொருள்களை வாங்கும் எண்ணம் உள்ளவர்கள், கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ள முடியாதவர்கள், நிதியை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டை வாங்கவே கூடாது.
கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் செலுத்தாமல் விட்டால் அது சிபில் ஸ்கோரை பாதிக்கும். மேலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என்பதால் , எந்த சூழலிலும் நிலுவை தொகை வைக்காதீர்கள்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரே சமயத்தில் 2 முதல் 3 கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளவே கூடாது. சலுகைகள் தருவதாகக் கூறி வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளை முழுமையாக புரியாமல் வாங்காதீர்கள். அதேபோல் குறைந்தபட்ச தவணைத் தொகையைக் கட்டிவிட்டு மீதியை தவணையில் கட்டாதீர்கள்.
ஏனெனில் மீது தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி போடுவார்கள். எனவே கிரெடிட் கார்டில் கடன் வாங்கிடாதீர்கள். உங்களால்திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிந்தால் தயவு செய்து கிரெடிட் கார்டில் பொருளை வாங்கிவிடாதீர்கள்.
கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுப்பதை கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications