எஸ்.பி.ஐ வங்கி போறீங்களா? SBI ஏடிஎம்மில் பணம் இல்லையா? குழம்பிய கஸ்டர்ஸ்.. எஸ்பிஐ திடீர் விளக்கம்
சென்னை: எஸ்பிஐ-யின் ஏடிஎம்களில் குறைவான பண இருப்பு உள்ளதாக தகவல்கள வெளியாகிய நிலையில், எஸ்பிஐயே இதுகுறித்து விளக்கம் ஒன்றினை தந்துள்ளது. என்ன அது?
எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதுதான்: "ஏப்ரல் 8-ந்தேதியன்று, ஒரு குறிப்பிட்ட மாடல் ஏ.டி.எம். ஒன்றில் பண இருப்பு குறைவாக இருப்பதை எமது வங்கிக் கிளைகளுள் ஒன்று அடையாளம் கண்டது.

ஏடிஎம்: அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஏப்ரல் 6-ம் தேதி இரவு மற்றும் 7-ம் தேதி அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் முகப்பு கதவில் அங்கீகாரம் அளிக்கப்படாத ஊடுருவலை 2, 3 நபர்கள் அடங்கிய ஒரு கும்பல் செய்திருப்பது சி.சி.டி.வி. பதிவுகளின் மூலம் தெரிய வந்தது.
அந்த மோசடிக்காரர்கள், ஏ.டி.எம். வெண்டாரின் உரிமையாளரது நம்பகமான ஆவணங்களை அனுமதியின்றி பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் புகுந்து ஏ.டி.எம். ரொக்கப்பணத்தை வழங்கும் வடிவமைப்பை மாற்றியிருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கு பிற வங்கிகளின் பல்வேறு டெபிட் கார்டுகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக எந்திரம் கூடுதலாக பணத்தை வினியோகிக்கும் விளைவு ஏற்பட்டிருந்தது.
மோசடிகள்: 7-ம் தேதி காலை நேரத்தில் இன்னும் ஒரு ஏ.டி.எம்.-யிலும் இதே போன்ற மோசடி முறையை பயன்படுத்தி குறைவான தொகையில் பண மோசடிக்கான முயற்சி செய்யப்பட்டிருப்பதையுமம் நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம். இத்தகைய மோசடி முயற்சிகள் நிகழாமல் தடுப்பதற்காக எமது அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டுப்பாடு அம்சங்களை புகுத்தினோம்.
அனுமதியில்லாமல் பாதுகாப்பான ஆவணங்களது அணுகு வசதியை பயன்படுத்தினாலும் கூட ஏ.டி.எம். வடிவமைப்புகளை மாற்ற இயலாதவாறு பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம்.
நம்பாதீங்க: இச்சம்பவம் குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து விஷமிகள் பரப்பக்கூடிய வதந்திகளை நம்ப வேண்டாம் . உண்மையான தகவல்களை மட்டும் பின்பற்றுமாறு பொதுமக்களையும், எமது வாடிக்கையாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்" என்று தன்னுடைய விளக்கத்தில் வங்கி தெரிவித்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications