Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 கேஸ் சிலிண்டர் இருக்கா? ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமா? இந்த மெசேஜ் வந்திருக்கா? என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டரை கஸ்டமர்கள், வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய புதிய நடவடிக்கையை ஆயில் கம்பெனிகள் எடுத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் தரப்பில் மிகுந்த குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றும், பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.

வீடுகளுக்கு 1 இணைப்பு, 2 இணைப்புகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில், 2 கேஸ் சிலிண்டர் கனெக்‌ஷன் வைத்திருப்பவர்கள், சிலிண்டர் காலியாவதற்கு முன்பே, இன்னொரு சிலிண்டரை புக் செய்து வாங்கி கொள்ளலாம். ஆனால், ஒரே ஒரு கனெக்‌ஷன் வைத்திருப்பவர்கள், சிலிண்டர் முடிந்தபிறகுதான் வாங்க முடியும்.

gas cylinder Gas company sms 2

12 சிலிண்டர்களுக்கு மானியம்

மத்திய அரசு வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது. வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, "அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் காஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது.. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்" என்று இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மெசேஜ் அனுப்பப்படுவதாக தகவல்கள் பரவி பரபரப்பை தந்து வருகின்றன.

15 சமையல் கேஸ் சிலிண்டர்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால், 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டுமானால், அதற்கான காரணத்தை விளக்கி கேஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" என்றார்.

குழப்பம், அதிருப்தி, அதிர்ச்சி

இதன்காரணமாக, ஒரு ஆண்டுக்கு 15 கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்த துவங்கிவிட்டது..

பொதுமக்கள் இதுகுறித்து கூறும்போது, "திடீரென, 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்களுக்கு, அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று சொன்னால் எப்படி? ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும்போதும், அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தையும் கேட்டால் எப்படி?

வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று சொல்வதால், பலர் பாதிக்கப்படலாம்.. அதனால், ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும்போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+