Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முந்தா நாள்தான் பாஜகவோட கூட்டணி வைத்த கட்சி.. இரு நாட்களில் கரைந்து காணாமல் போனது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த இரண்டே நாட்களில் ஒரு கட்சி கரைந்து காணாமல் போயிருக்கிறதே தெரியுமா?

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என ஒரு படத்தில் கவுண்டமணி வசனம் பேசுவார். அது 100க்கு 100 உண்மை என அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் நாளில் என்னென்ன நடக்க போகுதோ தெரியவில்லை.

Do you know a party which is melted within 2 days after alliance talks with BJP

அந்த வகையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதாவது அவர் திரைப்படங்களில் உச்சத்தில் இருக்கும் போதே கட்சியை தொடங்கினார். அதிமுக, திமுக தலைமைக்கு நெருக்கமானவராகவும் இருந்தார்.

இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தென்காசி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வென்றனர். அதன் பிறகு சரத்குமாருக்கு தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றி இல்லை. இதையடுத்து அதிமுக பிளவுப்பட்ட போது கூட மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்திவந்தார்.

இந்த நிலையில் சில அமைதியாக இருந்த நிலையில் திடீரென 2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராவேன் என்றார். ஒருமுறை தனது கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என 2026 ல் தெரிய வரும். தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்.

150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ம் ஆண்டு என்னை முதலமைச்சர் ஆக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். திமுகவுக்கு உழைத்ததற்கு என்னை கருணாநிதி ராஜ்யசபா எம்பியாக்கி அழகு பார்த்தார்.

ஆனால் அதிமுகவுக்கு உழைத்த என்னை கருவேப்பில்லை போல் தூக்கி எறிந்துவிட்டார்கள் என சரத்குமார் விமர்சித்திருந்தார். அதுபோல் தனது மாமியாரின் ஆசையும் தான் தமிழகத்தின் முதல்வராவதுதான் என்றார். மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சரத்குமார் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தென் தமிழகத்தில் அவரது சமூகத்திற்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இதனால் அவர் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென சரத்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க போவதாக சரத்குமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கூட சரத்குமார் தனது நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் திடீரென நடுராத்திரி 2 மணிக்கு அவருக்கு ஒன்று தோன்றியுள்ளது. அதாவது தமது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டால் என்ன என தோன்றியது. இதையடுத்து தனது விருப்பத்தை அண்ணாமலையிடம் தெரிவித்துள்ளார் (காலையில்தான்). அவரும் ஒப்புக் கொள்ள, பிரஸ் மீட் நடத்தி முடிவை அறிவித்துவிட்டனர்.

இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில், சரத்குமாருக்கு கட்சியை நடத்த பணம் வேண்டும், அது போல் தேர்தலில் போட்டியிடவும் பணம் வேண்டும். இதற்காக சொந்த காசும் போட முடியாது, எனவே அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டால் அங்கு ஒரு பதவி கிடைக்கும். பிறகு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும். மத்திய அமைச்சரவையில் கூட இடம் பெற வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவர் தனது கட்சியை இணைத்திருப்பார். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டதட்ட12 ஆண்டுகளாக அவருக்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்கவில்லை என்பதால் அவர் இப்படி கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்திருக்கலாம். இவ்வாறு அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+