தேனி கோர்ட் வாசலில்..இப்பதான் மூச்சு விட்டாரு நடிகர் வையாபாரி.. அதுக்குள்ள? மதுரைன்னாலே பாசம்.. செம
சென்னை: கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்கப்பட்டு, ஒருவழியாக மெல்ல வெளியே வந்திருக்கும் நடிகர் வையாபுரி, தன்னுடைய ஆசை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் என்றாலே அதில் கவனிக்கப்படும் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவர், பிரபல நடிகர் வையாபுரி.. ஆனால், ஒருமுறை மதுரை பிரச்சாரத்தில் இவர் மீது ஒரு கேஸ் போட்டுவிட்டார்கள்.

அதாவது, கடந்த 2014-ல் தேனியில் பிரச்சாரம் செய்யும்போது, சில பெண்கள் இவருக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். அப்போது, ஆரத்தி எடுத்தவர்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக, போடி நகர் போலீஸ் நிலையத்தில் போடி பறக்கும்படை பிரிவு தாசில்தார் குணசேகரன் என்பவர் புகார் தந்திருந்தார்.
கோர்ட்டில் வழக்கு: ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் 100 ரூபாய் பணம் வைத்து வையாபுரி தந்துவிட்டதாக புகாரில் சொல்லியிருந்தார். போடி ஒருங்கிணைந்த குற்றவியல் கோர்ட்டில் வழக்கும் நடந்தது. வையாபுரிக்கு சம்மனும் அனுப்பினார்கள்.. கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த கேஸ் நடந்தது.. 2022-ம் ஆண்டுதான், வழக்கின் இறுதி விசாரணை நடந்ததது. விசாரணையில் வையாபுரியும் பங்குபெற்றார்...
இறுதியில், நடிகர் வையாபுரி குற்றவாளி இல்லை என்று கோர்ட் தீர்ப்பளித்து, அவரை விடுதலையும் செய்து உத்தரவிட்டது.. இப்படி ஒரு தீர்ப்பை கேட்டதுமே, கோர்ட் வளாகத்திலேயே நிம்மதி பெருச்சுமூச்சு விட்டார் வையாபுரி.
இதோ இப்போது எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய போவதாக சொல்கிறார்.. மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வையாபுரி கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஹீரோ சான்ஸ்: அரசியலை பொறுத்தவரை வில்லன்கள் காமெடியனாகவும், காமெடியன்கள், வில்லன் மற்றும் ஹீரோக்களாகவும் ஆகி வருகிறார்கள்.. இப்போது நான் வில்லனாக நடித்து வருகிறேன்.. ஹீரோயினுக்கு அப்பா போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் சினிமாவுக்குள் வருகிறார்கள்.. அதனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோவாக நடிப்பேன்..
எம்பி தேர்தலின்போது சூட்டிங் இல்லாமல் இருந்து, வாய்ப்பு வழங்கப்பட்டால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஒரே கட்சி ஒரே கொள்கை கொண்டது அதிமுக.. என்னுடைய பிரசாரம் பிற கட்சிகளை வசைபாடுவதாக இருக்காது... மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்வேன்..
மதுரை தேனி: பாசக்கார ஊர் என்றால் அது நம்ம மதுரை தான். நான் பிறந்த சொந்த ஊர், மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன்... தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள்.. எனவே, அதை பற்றி நான் பேசினால் சரியாக இருக்காது... நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிடாதீங்க" என்றார் வையாபுரி.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications