Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி கோர்ட் வாசலில்..இப்பதான் மூச்சு விட்டாரு நடிகர் வையாபாரி.. அதுக்குள்ள? மதுரைன்னாலே பாசம்.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்கப்பட்டு, ஒருவழியாக மெல்ல வெளியே வந்திருக்கும் நடிகர் வையாபுரி, தன்னுடைய ஆசை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் என்றாலே அதில் கவனிக்கப்படும் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவர், பிரபல நடிகர் வையாபுரி.. ஆனால், ஒருமுறை மதுரை பிரச்சாரத்தில் இவர் மீது ஒரு கேஸ் போட்டுவிட்டார்கள்.

Do you know about Actor vaiyapuri and Going to campaign for AIADMK in the MP Election says Vayapuri in Madurai

அதாவது, கடந்த 2014-ல் தேனியில் பிரச்சாரம் செய்யும்போது, சில பெண்கள் இவருக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். அப்போது, ஆரத்தி எடுத்தவர்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக, போடி நகர் போலீஸ் நிலையத்தில் போடி பறக்கும்படை பிரிவு தாசில்தார் குணசேகரன் என்பவர் புகார் தந்திருந்தார்.

கோர்ட்டில் வழக்கு: ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் 100 ரூபாய் பணம் வைத்து வையாபுரி தந்துவிட்டதாக புகாரில் சொல்லியிருந்தார். போடி ஒருங்கிணைந்த குற்றவியல் கோர்ட்டில் வழக்கும் நடந்தது. வையாபுரிக்கு சம்மனும் அனுப்பினார்கள்.. கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த கேஸ் நடந்தது.. 2022-ம் ஆண்டுதான், வழக்கின் இறுதி விசாரணை நடந்ததது. விசாரணையில் வையாபுரியும் பங்குபெற்றார்...

இறுதியில், நடிகர் வையாபுரி குற்றவாளி இல்லை என்று கோர்ட் தீர்ப்பளித்து, அவரை விடுதலையும் செய்து உத்தரவிட்டது.. இப்படி ஒரு தீர்ப்பை கேட்டதுமே, கோர்ட் வளாகத்திலேயே நிம்மதி பெருச்சுமூச்சு விட்டார் வையாபுரி.

இதோ இப்போது எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய போவதாக சொல்கிறார்.. மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வையாபுரி கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

ஹீரோ சான்ஸ்: அரசியலை பொறுத்தவரை வில்லன்கள் காமெடியனாகவும், காமெடியன்கள், வில்லன் மற்றும் ஹீரோக்களாகவும் ஆகி வருகிறார்கள்.. இப்போது நான் வில்லனாக நடித்து வருகிறேன்.. ஹீரோயினுக்கு அப்பா போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் சினிமாவுக்குள் வருகிறார்கள்.. அதனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோவாக நடிப்பேன்..

எம்பி தேர்தலின்போது சூட்டிங் இல்லாமல் இருந்து, வாய்ப்பு வழங்கப்பட்டால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஒரே கட்சி ஒரே கொள்கை கொண்டது அதிமுக.. என்னுடைய பிரசாரம் பிற கட்சிகளை வசைபாடுவதாக இருக்காது... மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்வேன்..

மதுரை தேனி: பாசக்கார ஊர் என்றால் அது நம்ம மதுரை தான். நான் பிறந்த சொந்த ஊர், மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன்... தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள்.. எனவே, அதை பற்றி நான் பேசினால் சரியாக இருக்காது... நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிடாதீங்க" என்றார் வையாபுரி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+