அதிமுக எம்பி சி.வி.சண்முகம் எப்படி இருக்கிறார்.. அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட தகவல்
சென்னை: அதிமுக ராஜ்யசபா எம்பி சி.வி.சண்முகம் நெஞ்சு வலி காரணமாக நேற்று முன் தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் எப்படி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று முன் தினம் திண்டிவனத்திலிருந்து சென்னை வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவரை மருத்துவர்கள் நேற்று இரவு வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்தனர்.
அண்மையில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவி நீககம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை கூறுகையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அட்மிட் ஆகவில்லை. வழக்கமான ரெகுலர் செக்கப்பிற்காக மட்டுமே அவர் அப்பல்லோவுக்கு வந்தார். மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications