Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 ரூபாய் போதும்.. ஜாம்ஜாம்ன்னு இருக்கலாம்.. அருமையான ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.. மத்திய அரசு செம்ம

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெறும் 100 ரூபாயில் முதலீடு செய்து, நல்ல வட்டியை பெற முடியுமா? இதைத்தான் மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. அந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்துமே பரவலாக மக்களின் ஆதரவை பெற்றவை.. இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுபவை.. பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும் நிறைந்தவை.

Do you know about post office recurring deposit interest rate and what are the Procedures

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், முதலீட்டாளர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டவை. ஏராளமான அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது, தொடர் வைப்பு நிதி திட்டமும் ஒன்றாகும்.

ED எனப்படும் ரிக்கெரிங் டெபாசிட் அதாவது, தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அதற்கு பெயர்.. ரெக்கரிங் டெபாசிட் எனப்படுவது தொடர் வைப்பு நிதியாகும். அதாவது, ஒரு தொகையை நீண்ட கால சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதாகும்... இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு, மாதத்திற்கு 100 ரூபாயிலிருந்து தொடங்குகிறது என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியே.. அதேசமயம், முதலீடு செய்யும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

சேமிப்பு திட்டம்: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் கணிசமான தொகையாக, வட்டி விகிதத்துடன் சேர்த்து, லாபத்தையும் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஒரு வயது வந்தவர், 3 பெரியவர்கள் வரை சேர்ந்து இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில், ஜாயிண்ட் அக்கவுண்ட்டை தொடங்கலாம். இதைதவிர, ஒரு பாதுகாவலர், ஒரு மைனர் அல்லது பலவீனமான மனநிலையுள்ள நபர் சார்பாக ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.. அதேபோல, 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தன்னுடைய சொந்த பெயரிலும் கணக்கு தொடங்கலாம். ஆக, இதில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம்.

பொதுத்துறை வங்கிகள்: பொதுத்துறை வங்கிகள் முதல், சில தனியார் நிதி நிறுவனங்கள் வரை, இந்த தொடர் வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களில் (அதாவது 60 மாதங்களில்) முதிர்ச்சியடையும்.. இதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து அடுத்த 5 வருடங்களுக்கு அந்த நபர் சேமிப்பை தொடரலாம்.

Do you know about post office recurring deposit interest rate and what are the Procedures

​​தபால் நிலையத்தின் தொடர் வைப்பு தொகையில் வருடத்துக்கு 5.8 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது.. இந்த வட்டி விகிதமானது, 1 ஜனவரி 2023 முதல் பொருந்தும்... அத்துடன் வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது. 100 ரூபாயில் இருந்து முதலீட்டை தொடங்கினால், 5 வருடங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படுகிறது.

வருமானம்: உதாரணத்துக்கு, இந்த RD திட்டத்தில் மாதம் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடங்களில் ரூ 3.52 லட்சம் கிடைக்கும். கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்தத் தொகை ரூ.8.32 லட்சமாக இருக்கும்.. இந்த திட்டத்தில் சிறந்த வருமானத்தை பெறுவதுடன், முதலீடு செய்த பணமும் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர், இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+