ஜெயலலிதா போயஸ் வீட்டில் உள்ள "ஸ்பெஷல் பெல்".. அதை மட்டும் அழுத்தினா.. அவ்வளவுதான்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்றாட வாழ்க்கை குறித்து சுவாரசிய விவரங்கள் சில வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியான ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதில் சசிகலா, கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக இந்த அறிக்கை சசிகலாவை நேரடியாக குற்றஞ்சாட்டி உள்ளது. முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது.
ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படி ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மூலம் வெளியான நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அன்றாட வாழ்க்கை குறித்து சுவாரசிய விவரங்கள் சில வெளியாகி உள்ளன.
இரவே எடுத்துவைக்கும் ஜெயலலிதா: அதன்படி ஜெயலலிதா தனது வீட்டில் இருந்தால் இரவே மறுநாளுக்கான உடைகளை எடுத்துவைத்துவிடுவார். மறுநாள் என்ன போட வேண்டும் என்று முதல் நாளே உடைகளை எடுத்து வைத்து விடுவார். முதல் நாளே அவரே எல்லா துணிகளையும் தேர்வு செய்வார்.

தான் அணிய வேண்டியதை அவரே தேர்வு செய்வார். பின்னர் அயர்ன் செய்பவரிடம் கொடுத்து அயர்ன் செய்து தயாராக வைப்பார்.
4 மணி நேரம் மட்டும் தூக்கம் - 8 மணி வரை தூக்கம்: 12 மணி வரை மறுநாளுக்கான வேலைகளை திட்டமிடுவார். அதாவது என்ன செய்ய வேண்டும். என்ன பேச வேண்டும். மறுநாள் திட்டம் என்ன என்று திட்டம் போடுவார். அதன்பின் 12 மணிக்கு தூங்க செல்லும் நபர் 4 மணிக்கு எழுந்து கொள்வார்.
எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் எந்த பணியும் இல்லை என்றால் 8 மணி வரை கூட தூங்குவார். ஆனால் மிக அபூர்வமாகவே இப்படி அவர் தூங்குவார்.
பெல் இருக்கும்: அவர் வீட்டில் ஒரு பெல் இருக்கும். அவர் காலையில் எழுந்தவுடன் அந்த பெல் அடிக்கும். அந்த பெல் அடித்தால் ஊழியர்கள் எல்லாம் குளித்துவிட்டு ரெடியாகி இருக்க வேண்டும். உணவும் ரெடியாகி இருக்க வேண்டும்.

எல்லா ஊழியர்களும் குளித்துவிட்டுத்தான் தன்னை பார்க்க வேண்டும். பணிகளை செய்ய வேண்டும். அவர் அடிக்கும் இந்த பெல்லிற்காக தினமும் அவரின் வீட்டில் ஊழியர்கள் கண் கொத்தி பாம்பு போல உஷாராகி இருப்பார்கள்.
ஜெயலலிதா காலையில் 6 மணிக்கு காபி குடிப்பார். அதன்பின் காலை சாப்பிட்டவுடன் மீண்டும் காபி குடிப்பார். பின்னர் செல்லும் வழியில் காரில் ஒரு முறை காபி குடிப்பார். இப்படி அடிக்கடி காபி குடிப்பார்.
அவர் தூக்கத்தை கட்டுப்படுத்தியது எல்லாம் இந்த காபி மூலம்தான் என்கிறார்கள் அவரின் போயஸ் கார்டனில் பணியாற்றிய ஊழியர்கள்.












Click it and Unblock the Notifications