காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா..?
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் உருவாகி பலம் பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலம் பெற்றதையடுத்து, அடுத்த 36 மணி நேரத்தில் இது ஃபனி புயலாக மாற வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும். இதன் காரணமாக வடதமிழகம், தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் 30, மே 1-ம் தேதிகளில் வடதமிழகம், தெற்கு ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications