Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல விஐபி மனைவியையும் விடல.. நடிகை குளிப்பதையும் வீடியோ எடுத்து.. பொறியில் மாட்டிய சென்னை பூசாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். இவரை பற்றின கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

நடிகை கொடுத்த ஆதாரங்கள் அனைத்தும் பூசாரியின் செல்போனிலிருந்து போலீசார் எடுத்திருக்கிறார்கள்.. அவரது செல்போன், தற்போது ஆய்வுக்காக தடயவியல் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு, இந்த செல்போனில் மேலும் பல தகவல்கள் கிடைக்குமாம்.

Chennai Actress Priest Kodaikanal

கொடைக்கானல்: இந்நிலையில், 10 நாட்களாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவி பதுங்கியிருந்த பூசாரியை, போலீசார் எப்படி பொறிவைத்து பிடித்தார்கள் என்பது பற்றின தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "கைதுசெய்யப்பட்ட கார்த்திக் முனுசாமி, அவரது அப்பா என அவர்களின் குடும்பத்தார் வழிவழியாக பூசாரிகளாக இருக்கிறார்கள்.. காளிகாம்பாள் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோயில் அறங்காவலர் குழுவில் கார்த்திக் முனுசாமி குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகளவில் இருந்திருக்கிறது.. பிரபலமான நடிகை என்பதால், கார்த்திக் முனுசாமி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

செல்போன்: வெளி உலகத்திற்கு தெரியாமல் வீட்டிலேயே தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்படி 2 பேருமே உல்லாசமாக இருக்கும்போது, அதனை, இன்னொரு செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்.

அதேபோல, நடிகை குளிக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்.. இவர்களுக்குள் தகராறுகள் ஏற்படும்போதெல்லாம், நடிகையை பல முறை பூசாரி அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிப்பேன் என்று நடிகை சொன்னதற்கு, அந்த உல்லாச வீடியோ, குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டியிருக்கிறார்.

உல்லாசம்: இருந்தாலும், தன்னுடைய செல்போனில் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை நடிகை பார்த்துவிட்டதால், அதுபற்றி வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்று பூசாரி பயந்துள்ளார். உடனே தன்னுடைய மனைவி பிரியா மற்றும் தோழி சுவேதா ஆகியோர் மூலம் நடிகையிடம் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருக்கவும், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழவும் ரூ.40 லட்சம் வரை பணம் தருவதாகவும் பேரம் பேசியுள்ளார்.

ஆனால் நடிகையோ, புகார் அளிப்பதில் உறுதியாக இருந்துள்ளார். அதனால், எப்படியாவது கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கிவிட வேண்டும் தலைமறைவாக இருந்த பூசாரி, தலைமறைவாக இருந்துகொண்டே, தன்னுடைய செல்போனில் முயற்சி செய்து வந்துள்ளார்.

பெண்கள்: அப்போதுதான் அவரது செல்போன் சிக்னலை வைத்து பொறிவைத்து பிடித்தோம்.. கோயிலுக்கு வந்த பெண்களை மயக்கி ரகசிய வீடியோ எடுத்த விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளதால், அதன் பின்னணி குறித்தும், அவருக்கு உடந்தையாக இருந்த சக கோயில் பூசாரிகள் குறித்தும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும்" என்கிறது போலீஸ் தரப்பு.

இதனிடையே, பூசாரியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக எடுத்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த நிலையில், அதற்கான வங்கி பரிவர்த்தனை ஆவணங்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம்.

விஐபி மனைவி: அதுமட்டுமல்ல, கோயிலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட விஐபி வீட்டு பெண்களை சீரழித்திருக்கிறாராம் இந்த பூசாரி. .. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே, பெரிய இடத்துப் பெண்கள் என்பதால், போலீசார் ஆபாச வீடியோக்கள் எந்த வகையிலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறார்களாம்.

இந்த நிலையில் , தனக்கு ஜாமீன் வழங்க கோரி பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணிடம் சமரசம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கார்த்திக் முனுசாமி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+