Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்.. ரூ.5500 மாதந்தோறும் வேணுமா? அஞ்சலக சூப்பர் திட்டம்.. சபாஷ் எம்.ஐ.எஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வகையான திட்டங்கள் தபால் அலுவலகத்தால் இயக்கப்பட்டுவரும் நிலையில், மிகவும் பயன்தரத்தக்க திட்டமாக இருந்துவருவது எம்ஐஎஸ் என்ற திட்டமாகும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது தெரியுமா?

பொதுமக்களுக்கு, உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை நம்முடைய அஞ்சலகங்கள் செயல்படுத்தி வருகின்றன.. அந்தவகையில், மக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும் அஞ்சலக திட்டங்கள் எப்போதுமே பெற்று வருகின்றன. இதற்கு காரணம், அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் எப்போதுமே பாதுகாப்பானது.. நம்பகமானது.

Do you know the Fantastic Benefits in Post Office Monthly Income Scheme - MIS and earn rs5500 to rs 9000 per month

எனவேதான், மாதந்தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள், Post Office Monthly Income Scheme - MIS (எம்ஐஎஸ்) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கூட்டுக்கணக்கு: இந்த திட்டத்திற்கு மொத்தம் 5 வருடம் முதிர்வு காலம் வழங்கப்படுகிறது.. ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.4 சதவீதமும் தரப்படுகிறது..

இந்த திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு மாத வருமானம் ரூபாய் 5500 பயனாளரின் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு செலுத்தப்படும். திட்டத்தின் முடிவில் வட்டியாக ரூபாய் 3 லட்சத்து 33 ஆயிரத்தையும் பயனாளர்கள் பெற முடியும்.. திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு நீட்டிக்க விரும்பினால், அதற்கான விருப்பம் வழங்கப்படும்.

எனினும், முதிர்வு காலத்திற்கு முன்னதாக தொகையை எடுக்க விரும்பும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன் இந்த திட்டத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.

அபராதம்:
5 வருடத்துக்கு முன்பே பணம் தேவைப்படால் அதற்கு சில விதிகள் உள்ளன.. குறிப்பாக, 1 வருடத்திற்குள் உங்களால் பணம் எடுக்க முடியாது.. ஒரு வருடத்திற்கு பிறகு, கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான வசதியைப் பெறுவீர்கள், ஆனால் அபராதமாக சில பணம் கழிக்கப்படும். ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.

கணக்கை தொடங்கி 3 வருடத்துக்கு பிறகும், 5 வருடத்துக்கு முன்பும் நீங்கள் பணத்தை எடுத்தால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதத்தைக் கழித்த பிறகு வைப்புத் தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும்..

சலுகைகள்: இந்த திட்டத்தில் தனி நபராகவும், கூட்டாகவும் சேர்ந்து முதலீடு செய்யலாம். இதனை குழந்தைகள் பெயரில் பாதுகாவலர் துணையுடன் தொடங்கி கொள்ளலாம். 10 வயதிற்கு மேலான குழந்தைகள் அவர்களாகவே இந்த கணக்கினை நிர்வகித்து கொள்ள முடியும். அதேபோல இந்த அஞ்சலகத்தின் நாமினி வசதியும் உண்டு. உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+