சேலம்,நெல்லை மக்களுக்கு குட் நியூஸ்! வருகிறது மஞ்சள் பஸ்! இந்த பேருந்தில் கவனிச்சீங்களா? செம மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமலில் இருந்த பச்சை நிற எஸ்இடிசி பேருந்துகள் புனரமைக்கப்பட்டு மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்த பேருந்துகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (11.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளும், என மொத்தம் 100 பேருந்துகள் 14 கோடியே 90 லட்சம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
#EXCLUSIVE #பிரத்தியேகம்
— TNSTC Enthusiasts (@tnstcbus) July 17, 2023
த.நா.அ.போ.க #கும்பகோணம்
T.N.S.T.C #Kumbakkonam
GLOBAL TVS கூண்டு கட்டுமாண பணிமனையில் புனரமைக்கப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வந்தது முதல் பேருந்து.
First refurbished bus got delivered.
TNSTC Enthusiasts@tnstcbus pic.twitter.com/k8EmEal6ks
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் கொண்டனர்.
🥰#beautiesonroad #Alert!!!💐🥰
— TNSTC Enthusiasts (@tnstcbus) August 10, 2023
🚍🚌100 புனரமைக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் பிரத்தியேக துவக்க விழாவிற்கு தலைநகர் நோக்கி வருகிறது!!🎊🎉
🚍🚌100 TNSTC Beauties on the way to State Capital for its Grand Inaugural!🎊🎉
(10 August 2023)
Album: 1@tnstcbus @sivasankar1ss pic.twitter.com/iLvLjJsJmF
என்ன மாற்றம்: இந்த பேருந்துகள் அனைத்திலும் டிஜிட்டல் போர்ட் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் இரண்டு பக்கமும் டோர் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு தானாக திறந்து மூடும் வகையில் தானியங்கி கதவுகள் வைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications