இன்று பொங்கல் பரிசு.. டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை.. தமிழக அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு
சென்னை: டோக்கன் பெறாதவர்களுக்கு, இன்றைய தினம் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இது பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இந்த பண்டிகையொட்டி, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பொங்கல் பரிசு: முன்னதாக, பொங்கல் பரிசு தொகுப்புக்கான ரொக்க தொகையை பெறுவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்துவோர் போன்ற பிரிவினரைத் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குமே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. பின்னர் இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே ரூ.1000, அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பும் பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என்று சர்ப்ரைஸ் தந்தது.
கட்டுப்பாடுகள்: ஆனால், கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் 1000 குடும்ப அட்டைதாரர்களை கொண்ட ஒவ்வொரு நியாயவிலை கடையிலும் சுமார் 400 முதல் 500 அட்டைதாரர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.. அவர்களுக்கு பரிசுத் தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
அறிவிப்பு: இதுகுறித்து, 2 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படியே, இன்றைய தினம், ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications