மகா சிவராத்திரி 2025 எப்போது கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 26 ஆம் தேதியா? 27 ஆம் தேதியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்திரி பூஜை எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த வைபவம் பிப்ரவரி 26 ஆம் தேதியா இல்லை 27ஆம் தேதியா என்பதிலேயே சிலருக்கு குழப்பம் இருக்கிறது.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அற்புதமான நாளாக கருதப்படுகிறது.

maha shivratri 2025 2025

சிவனுக்கு 5 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும்.

இதில் யோக சிவராத்திரி என்பது யோகி தனக்கென ஒரு இரவை ஒதுக்கி சிவனை வழிபடுவது ஆகும். நித்திய சிவராத்திரி என்பது தினமும் வரும் சிவராத்திரியாகும். பக்ஷ சிவராத்திரி என்பது 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். மாச சிவராத்திரி மாதாமாதம் வரும். வருட சிவராத்திரி என்பது மகா சிவராத்திரியாகும்.

சிவனுக்குரிய இரவு என்பதாகும். மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்தசியில் வரும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கமாகும். உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவது.

இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுவதாகும். அதாவது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவதை உணர்த்தும் ஒரு பூஜை ஆகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி எப்போது என்பதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 12.09 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 27ஆம் தேதி நள்ளிரவு 12.59 மணி வரை அனுசரிக்கப்படுகிறது.

மகாசிவராத்திரியின் போது சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவார் என நம்பப்படுகிறது. சிவராத்திரியின் போது அனைத்து சிவன் கோயில்களிலும் 4 கால பூஜை நடைபெறும். காலையில் குளித்து முடித்துவிட்டு எதையும் உண்ணாமல் விரதம் இருந்து 4 கால பூஜைகள் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விரதத்தை கலைக்க வேண்டும்.

விரதத்தின் போது சிவ நாமத்தை சொல்ல வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது. பழங்கள், தேன், நெய், இனிப்புகள், பால் உள்ளிட்டவைகளை சிவனுக்கு பக்தர்கள் படைப்பர்.

இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு சிவனின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள். இரவு பக்தர்கள் கண்விழிப்பதால், கோயில்களில் சிவன் தொடர்பான நாடகங்கள், பரதநாட்டியங்கள் உள்ளிட்டவை நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+