தண்ணீரில் மிதந்துகிட்டே சாப்பிடலாம்! அதுவும் நம்ம சென்னையில்! மிதக்கும் உணவகத்தின் சிறப்புகள் என்ன?
சென்னை: சென்னையில் விரைவில் மிதக்கும் உணவகம் அறிமுகமாகிறது எந்த இடத்தில் தெரியுமா?
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்களை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடலில் மிதக்கும் உணவகத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த மிதக்கும் உணவகத்திற்கான கப்பல் கட்டும் பணிகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. இந்த பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டார். இந்த மிதக்கும் உணவகம் குறித்து செய்தி வந்ததிலிருந்தே மக்களுக்கு அதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அதுகுறித்த செய்திகளையும் அவர்கள் தேடி வருகிறார்கள். சென்னையில் உள்ள மக்களில் பலர் வார விடுமுறையை கழிக்க முட்டுக்காடு பகுதிக்கு பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. ஒரு வேளை இந்த மிதக்கும் உணவகம் முட்டுக்காட்டில் செயல்படத் தொடங்கிவிட்டால் அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
தமிழக அரசு இந்த மிதக்கும் உணவகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த மிதவை கப்பலை உருவாக்கி வருகிறது. 125 அடி நீளம் 25 அடி அகலத்தில் இந்த மிதவை கப்பல் தயாராகி வருகிறது. இந்த கப்பல் இரண்டு அடுக்குகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் பயணித்துக் கொண்டே உணவருந்தலாம்.
கப்பலின் மேல் தளம் திறந்தவெளியாக இருக்கும். கீழே ஏசி வசதியுடன் கூடிய இருக்கைகள் இருக்கும். இந்த கப்பலில் சமையலறை, உணவு கிடங்கு, கழிவறை உள்ளிட்டவையும் இருக்கும். இதனால் சில உணவுளை கப்பலிலேயே சமைத்தும் சிலவற்றை வெளியில் இருந்து தயார் செய்து கொண்டு வந்தும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் கீழ்த்தளம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இதன் மேல் தளம் மட்டும் பாக்கியுள்ளது. எனவே இந்த கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டால் இந்த உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள், அவர்களை இந்த மிதக்கும் உணவகம் நிச்சயம் கவரும். இதற்கான கட்டணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால் பாதுகாப்புக்கு எந்த குறையும் இருக்காது.
இந்த உணவகத்தின் மதிப்பு ரூ 5 கோடி என்கிறார்கள். அது போல் கோவையிலும் மிதக்கும் உணவகம் கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது. இது போல் மிதக்கும் உணவகங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன தெரியுமா. உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவகம் துபாயில் ரூஸ்டர் தோவில் இருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் 400 பேர் சாப்பிடலாம். அது போல் ஐரோப்பாவிலும் சீன நாட்டின் மிதக்கும் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. வியத்நாமிலும் உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications