2020-ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் எது தெரியுமா?
சென்னை: 2020ஆம் ஆண்டு ஒரு ட்வீட் அதிகமுறை ரீட்வீட் செய்யப்பட்டது என்றால் அது எது தெரியுமா அதை ட்விட்டர் நிறுவனமே வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பிதான்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த படம் மாஸ்டர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
சென்னை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நெய்வேலி படப்பிடிப்பின்போது அங்கு ஷூட்டிங் நடத்தக் கூடாது என மாஸ்டர் படக் குழுவினரை எதிர்த்து பாஜகவினர் போராடினர். எனினும் தொடர்ந்து ஷூட்டிங் நடந்தது.
விஜயிடம் விசாரணை
இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்பு செல்வனின் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. இதையடுத்து விஜயிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முற்பட்டனர்.
நெய்வேலி
அப்போதுதான் அவர் மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்தார். அங்குச் சென்ற வருமான வரித் துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்த அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலேயே அழைத்துச் சென்றனர். எனினும் அவரது வீட்டிலிருந்து எதையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றவில்லை என அவர்களே தெரிவித்தனர்.
வருமான வரித் துறை
பாஜகவினர் போராட்டம், விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு உள்ளிட்டவற்றால் பரபரப்பு அடைந்த நிலையில் ரசிகர்கள் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்த விஜயை பார்க்கச் சென்றனர். நாள்தோறும் விஜயை பார்க்க ரசிகர்கள் நெய்வேலிக்கு படை எடுத்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்
இதையடுத்து ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு திக்குமுக்காடிய விஜய் படப்பிடிப்பின் கடைசி நாளன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பஸ் மீது ஏறி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
ரீட்வீட்
அதில் நன்றி நெய்வேலி என குறிப்பிட்டு ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அதை ரசிகர்கள் ரீட்வீட் செய்ததால் 2020ஆம் ஆண்டில் மிகவும் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக அது பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பன்மடங்கு மகிழ்ச்சி அடைந்துவிட்டார்கள்.