"சர்ப்ரைஸ்".. எகிறி அடிக்கும் ஓபிஎஸ்.. ஒரே கல்லுல "டபுள் மாங்காய்".. எடப்பாடியே எதிர்பார்க்கலயே
செந்தில்முருகனை வேட்பாளராக ஓபிஎஸ் டீம் அறிவிக்க காரணம் என்ன தெரியுமா
சென்னை: ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு லேசாக கலங்கி போயுள்ளதாம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, ஓபிஎஸ் அதுகுறித்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.. ஆனால், ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள் ஒருசில கருத்துக்களை எடுத்து சொன்னதாக தெரிகிறது.
"ஒருவேளை தமாகாவின் யுவராஜா போட்டியிட நேர்ந்தால், ஆதரவை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிடுவோம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு மாற்றாக, நாமளும் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும், போட்டியிடாமல் போனால், நம்மை பலவீனமாக நினைத்துவிடுவார்கள்" என்றார்களாம்..

முதலியார்
அதுமட்டுமல்ல, கவுண்டர் சமுதாயம் அல்லாத ஒரு வேட்பாளரை அதாவது "முதலியார்" வேட்பாளர் ஒருவரை, இடைத்தேர்தலில் நிறுத்தலாம்.. காரணம், கொங்கு சமுதாய ஓட்டுக்கள் என்பது எடப்பாடிக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், பிற சமூகத்தினரின் வாக்குகளை பெற்று, வெற்றியை சுபலமாக்கிவிடலாம் என்றும் எடுத்து சொன்னார்களாம்.. இதற்கு பிறகே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் அறிவித்தாராம்.. ஆனாலும், வேட்பாளர் யார் என்பதை ஓபிஎஸ் அறிவிக்காமலேயே இருந்தார்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகவே இத்தனை நாளும் காத்திருந்தார்.

பாக்யராஜ்
அதேசமயம், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பமும் ஓபிஎஸ் தரப்பில் ஓடிக் கொண்டிருந்தது.. ஒவ்வொருவருக்கும், ஃபோன் போட்டு, "போட்டியிடுங்கள்" என சொல்லி வந்தாலும், யாரும் அதற்கு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. டைரக்டர் பாக்யராஜை கூட ஓபிஎஸ் தரப்பினர் அணுகிய நிலையில், அதற்கு பாக்யராஜ் இணங்கவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில்தான், நேற்றைய தினம், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளர் செந்தில்முருகனை அறிவித்தார்.. வேட்பாளராக நியமிக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சாதி ஓட்டு
இன்னும் திருமணமாகவில்லை.. 42 வயதாகிறது.. எம்பிஏ நிதி மேலாண்மை படித்த செந்தில்முருகன் லண்டனில் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார்.. கொரோனோ உச்சத்தில் இருந்தபோது, இந்தியா திரும்பிய நிலையில், வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். அதிமுகவில் இணைந்து செயல்பணியாற்றிய நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் வெடிக்கவும், ஓபிஎஸ் பக்கம் தாவி தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.. ஆனால், செந்தில் முருகன் கட்சியில் பெரிய அளவில் அறியப்படாத நபராக இருந்தபோதிலும் முதலியார் சமூகத்தை சேர்ந்தவராம்.. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் முதலியார்கள்...

எடப்பாடி ஜெர்க்
ஏற்கனவே அதிமுகவில் முதலியார் சமூகத்திற்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களது சமூகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று பல வருடங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். இப்போது, ஓபிஎஸ் அறிவித்துள்ள செந்தில் முருகன் முதலியார் சாதி சங்கத்தில் உள்ளார். மேலும் இவரது அப்பா பாலகிருஷ்ணன், முதலியார் சாதி சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்கிறார்கள். அந்தவகையில், எடப்பாடி அணியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளையும் செந்தில்முருகனால், எளிதில் பெற முடியும் என்றும், இதன்மூலம் எடப்பாடியின் வேட்பாளர் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு நம்புகிறார்களாம்.. ஆக, ஒரே கல்லில் 2 மாங்காயை அடிக்க ஓபிஎஸ் டீம் ரெடியாகி விட்டதாம்..!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications