3வது முறை பிரதமர் பதவியை ஏற்க ஜூன் 8ம் தேதியை.. மோடி தேர்வு செய்தது ஏன் தெரியுமா? முக்கிய காரணம்
சென்னை: ஜூன் 8-ந் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி 8ம் தேதியை தேர்வு செய்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
இன்று டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராகிறார் மோடி.

கூட்டணி ஆட்சி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
8ம் தேதி ஏன்?: ஜூன் 8-ந் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி 8ம் தேதியை தேர்வு செய்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
பிரதமர் மோடி 17-09-1950 இல் பிறந்தார், அவரின் பிறப்பு எண்.8,{1+7=8}.. மொத்தமாக அவரின் பிறப்பு நாளின் கூட்டு தொகை 5. {1+7+9+1+9+5=35=5}. எண் கணிதம்படி அவருக்கு நல்ல எண்கள் என்று ஜோசியர்கள் கூறுவது 8, 1, 3, 5 & 6.
எண் 8 போலவே, அவரது வாழ்க்கை எப்போதும் தீவிரமானது. எப்போதும் extreme எல்லையில் இருக்க கூடியது. 8 மிகவும் கவர்ச்சிகரமான எண். இது பலரால் அஞ்சப்படுகிறது, சிலரால் விரும்பப்படுகிறது. அவர் இது தனக்கு ராசியான எண் என்று தீவிரமாக நம்புகிறார்.
2014ல் மோடி மே 26ம் தேதி பதவி ஏற்றார். இதன் கூட்டு தொகை 8. இந்த நிலையில் மீண்டும் 8ஐ மனதில் வைத்து மோடி பதவி ஏற்க உள்ளார்.
உதவி தேவை; சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications