Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.. அழகு நிலைய உரிமையாளர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன் என்பவர் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு மற்றொரு அழகுநிலையத்தில் பணிபுரிந்து வரும் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய காதல் ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்த நம்பிராஜனின் மனைவி, என்ன செய்தார் தெரியுமா? அதனால் அவரது கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த 30 வயதாகும் நம்பிராஜன் என்பவர், சென்னை புரசைவாக்கம் பகுதியில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். நம்பிராஜனும் , தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த 30 வயதாகும் நவீனா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். நவீனா பி.சி.எஸ். படித்திருக்கிறார். இவர்களின் திருமணம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் சாய்சுலாஸ் என்ற மகன் உள்ளார்.

chennai beauty parlor crime

இந்த நிலையில், நம்பிராஜனுக்கு மற்றொரு அழகுநிலையத்தில் பணிபுரிந்து வரும் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாம். பின்னர் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த 4 நாட்கள் முன்பு நண்பர் ஒருவர் மூலம் நவீனாவுக்கு தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த நவீனா இது பற்றி கணவரிடம் கேட்டிருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நம்பிராஜன் தொடர்ந்து அந்த பெண்ணுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 27-ந்தேதி குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அதில் நவீனா கணவனை பிரிந்து வாழ முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் நவீனாவை குடும்பத்தினர் சமாதானம் செய்து சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.

எனினும் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் நவீனா மிகுந்த மனவருத்தத்தில் இருந்த நிலையில் இரவு வீட்டில் உள்ள அறையில் நவீனா மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு உயிரையே மாய்த்துக் கொண்டாராம். இந்த நிலையில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக நவீனாவின் தாய் பிரிமளா காசிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் நம்பிராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+