இன்று மருத்துவர்கள் தினம்.. சுயநலம் கருதாத "வாழும் பிரம்மாக்களுக்கு" குவியும் வாழ்த்துகள்!
சென்னை: கொரோனா பெருந்தொற்றிலிருந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளின் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு இன்று மருத்துவர்கள் தினத்தையொட்டி பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உயிரை காக்கும் மருத்துவர்கள் எப்போதும் நாம் சாமியாகவே பார்ப்போம். எமனின் வாசலை தொட்டு விட்டு வந்தவர்களை கூட மருத்துவர்கள் காப்பாற்றி உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
உடம்புக்கு முடியாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ள உறவினர்களின் உடல் நிலை சரியாக மருத்துவமனைகளில் உள்ள கோயில்களிலோ அல்லது மனதிற்குள்ளோ வேண்டிக் கொள்வது வழக்கம்.

மானசீகம்
பின்னர் உறவினர் குணமாகிவிட்டதால் மானசீகமாக கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு பின்னர் வைத்தியம் பார்த்த மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு நன்றி பாராட்டுவார்கள். இது ஒரு புறம் இருக்க, கொரோனா தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் பரவி வருகிறது.

மருத்துவர்கள்
இது ஒரு தொற்று நோய் என தெரிந்தும் முகம் கோணாமல் விடுப்பு ஏதும் எடுக்காமல் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை கவனித்து அவர்களது உயிரை காப்பாற்றியும் வருகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்லாமல் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் சுயநலமில்லா சேவையை வழங்கி வருகிறார்கள்.

பூக்கள்
அப்படிப்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரை கொரோனா முன்கள பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் மேலும் விமானங்கள் மூலம் பூக்கள் தூவி கவுரவிக்கப்பட்டனர்.

வாழும் பிரம்மா
ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி வாழும் பிரம்மாக்களாக காட்சி அளிக்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. மருத்துவர்களும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications