கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்?
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு திடீரென தனது சிகிச்சை அளிக்கும் பணியிலிருந்து விலகியுள்ளார். சித்த மருத்துவம் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் இவர்.
கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆங்கில சிகிச்சை ஒரு பக்கம் அளித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைக் கொடுத்தது.
இதனால் தமிழக அரசும் சித்த மருத்துவர் வீரபாபுவை கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி கொடுத்தது.

பொறியியல்
இதையடுத்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க சாலிகிராமத்தில் இவருக்கு ஒரு பொறியியல் கல்லூரியில் தனி சித்த மருத்துவ மையத்தை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது. இந்த மையத்தில் இதுவரை உயிரிழப்பே இல்லாமல் இருந்து வந்தது.

கொரோனாவை விரட்டும் சித்தா
பெரும்பாலான கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்கவே விரும்பினர். இதனால் அந்த மையத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த மையத்திலிருந்து இதுவரை 5400 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகள் இருந்தாலும் அவர்களுக்கு டாக்டர் வீரபாபு சிறப்பான சிகிச்சை அளித்து கொரோனாவை விரட்டுவதாக கூறப்பட்டது.

ரஜினிகாந்த்
இவரது சிகிச்சை முறைகளை ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தார்கள். இந்த நிலையில் மருத்துவம் அளிக்கும் பணியிலிருந்து சித்த மருத்துவர் வீரபாபு விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்த பின்னர் நான் பணியிலிருந்து விலகிவிடுவேன் என வீரபாபு கூறியுள்ளார்.

மருத்துவமனை
இந்த நிலையில் இவரது விலகலால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீரபாபு விலகிய பின்னர் அண்ணா சித்த மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு சாலிகிராமம் சித்த மருத்துவ மையம் செயல்படும் என கூறப்படுகிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications