சென்னை மக்களே உஷார்.. கொஞ்சம் விட்டா கண்ணே போயிடும்! 'டிரை ஐஸ் பிரச்னை'.. மருத்துவர்கள் வார்னிங்
சென்னை: காற்று மாசு, கால நிலை மாற்றம் போன்ற காரணங்களால் சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் 'உலர் விழி' (Dry Eyes) பிரச்னையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் நகரமயமாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இதனை இன்னும் வேகமெடுக்க செய்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அபரிமிதமாக அதிகரிக்கிறது. வாழ்வாதாரத்திற்காக, உயிர் வாழ்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த புலம் பெயர்தல், அம்மக்களை பல நேரங்களில் கடும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகிறது.

இப்படி நகர்ப்புறத்தில் வந்து வேலை செய்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. உடல் பருமன், தூக்கமின்மை, மன சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதில் மற்றொரு முக்கியமான பிரச்னை 'உலர் விழி' பாதிப்பு. அதாவது கண்களுக்கு வரும் ஈரப்பதம் போதிய அளவு வராமல் இருப்பதுதான் இந்த உலர் விழி பிரச்னையாகும். தொடக்கத்தில் கண் எரிச்சல், கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இருப்பினும் முறையான ட்ரீட்மென்ட் எடுக்காவிடில் இது கண் பார்வையை பாதித்துவிடும்.
மனித உடலில் கண்களுக்கு மட்டும்தான் தனியான நோய் எதிர்ப்பு திறன் இருக்கிறது. கண்களில் ஏதேனும் சின்ன சின்ன பிரச்னை எனில் அதை இந்த நோய் எதிர்ப்பு திறனே சமாளித்துவிடும். ஆனால் இந்த திறன் பாதிப்புக்கு உள்ளாகும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் கண்களை பாதிக்க தொடங்கிவிடும். இதற்கு உலர் விழி பிரச்னையும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சிதா ராஜகோபாலன் கூறுகையில், "தற்போது சென்னையில் சுமார் 30 சதவிகிதம் பேருக்கு இந்த உலர் விழி பிரச்னை இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த பாதிப்பு சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீர் சுரக்காமல் இருந்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீர்தான். ஆனால், உலர் விழி பிரச்சினையுடையவர்களுக்கு சரியாக கண்ணீர் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும் தன்மை ஆகியவை ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக ஒளிவிலகல் குறைபாடு உடையவர்கள், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன்), முடக்குவாத பாதிப்புள்ளவர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. இத தவிர லேப்டாப்/கம்ப்யூட்டர்/செல்போன் போன்ற மின்னணு திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடிகள் பார்க்க வேண்டும். இது டிஜிட்டல் டிஸ்பிளேவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்" என்று கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications