Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுவசதி வாரியம் தந்த "விற்பனை பத்திரம்" சர்ப்ரைஸ்.. திடீரென வந்த அறிவிப்பு.. இனிமேல் பெரிய நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விற்பனை பத்திரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. வீட்டு வசதி அதிகாரிகள் தெரிவித்த இந்த நம்பிக்கையால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

விற்பனை பத்திரம் என்பது, ஒரு சொத்தினை விற்பனை செய்பவர், அதன் உரிமையை வாங்குபவருக்கு மாற்றிக் கொடுக்கும் முக்கியமான சட்ட ஆவணமாகும்... இதன்மூலம் வாங்குபவர் அந்த சொத்தின் முழு உரிமையை பெறுகிறார்..

Does Tamil Nadu Housing Board issue Sale Deeds and 20,554 people will be given Sale Deed soon

முக்கிய ஆவணம்: சொத்து உரிமை பரிமாற்ற வழக்கில் விற்பனை பத்திரம் மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது.. குத்தகை பத்திரம், அடமான பத்திரம், போலவே, விற்பனைப் பத்திரமும் கடத்தல் பத்திரத்தின் ஒரு வகுப்பாகும்... ஒரு சொத்தை விற்கும்போது, ​​விற்பனை பத்திரத்தின் ஆவணங்கள் கைக்கு வந்துசேரும்.

இந்நிலையில், வீட்டு வசதிய வாரியம் தரப்பில் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், தனியார், பிற அரசு துறை நிலங்களை கையகப்படுத்தும் வீட்டு வசதி வாரியம், குடியிருப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. இதில், கட்டப்பட்ட வீடுகள், உருவாக்கப்பட்ட மனைகளை வாங்குவதற்காக, பொதுமக்களிடம் பெரும் போட்டியே உள்ளது.. இதன்காரணமாக, வாரிய திட்டங்களில் காணப்படும் வில்லங்கத்தால், வீடு, மனை வாங்குவோர் தவிப்புக்கு உள்ளாவதாக தெரிகிறது.

வாரிய அதிகாரிகள்: அதேபோல, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நிலத்தின் இறுதி விலையை நிர்ணயிப்பதிலும், சில வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும் புகார்கள் கிளம்பின. இப்படி ஒருசில வாரிய அதிகாரிகளின் முறைகேடுகள் காரணமாக, தமிழகத்தில், 20,000க்கும் மேற்பட்டோர் விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவிப்பதாகவும், பரபரப்புகள் கிளம்பின.

இதுபோன்ற புகார்களுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.. இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, "வீட்டுவசதி வாரியத்தில் தவணை முடிந்தும், விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன... இதைத் தொடர்ந்து, இந்த 3 ஆண்டுகளில் மட்டும் 13,641 பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

Does Tamil Nadu Housing Board issue Sale Deeds and 20,554 people will be given Sale Deed soon

பத்திரப்பதிவு: பல இடங்களில் தவணை செலுத்தி முடிந்தாலும், ஒதுக்கீட்டாளர் உயிரிழந்த நிலையில், வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் தாமதமும் ஏற்படுகிறது.. இப்போதைய நிலவரப்படி, வீடு, மனைக்கான தவணை தொகையை செலுத்தி, 20,554 பேர் விற்பனை பத்திரம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்... இவர்கள் அனைவருக்குமே விரைவில் பத்திரம் வழங்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த உறுதியானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+