வதந்திகளை நம்பாதீர்.. கிரேஸி மோகன் மரணத்திற்கு காரணம் என்ன? சகோதரர் மாது பாலாஜி விளக்கம் - வீடியோ
Recommended Video
சென்னை: திரைப்பட வசன கர்த்தா, கிரேஸி மோகன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம், தமிழக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக, மாறுபட்ட தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், கிரேஸி மோகன், சகோதரரான, மாது பாலாஜி ஒரு விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜூன் 10ம் தேதி, மதியம் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். போனிலும், நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், நிறைய பேர் எங்களை போனில் அழைத்து, துக்கம் விசாரித்தனர். அவர்களுக்கு நன்றி.
இந்த பதிவை இப்போ போட காரணம், நாங்கள் மிகவும் ஷாக்கில் இருக்கிறோம். கிரேஸி மோகன் வியாதி வந்து சாகவில்லை. 10ம் தேதி காலை 7.30 மணி, 7.45 மணியளவில் கிரேஸி மோகனை நான் சந்தித்தேன். வழக்கம்போல ஜாலியாக பேசினார். அவருக்கு நீரிழிவு, பிபி நோய்கள் கிடையாது.
காலை 9.15 மணியளவில் காலை உணவு சாப்பிட்டார். 9.30 மணியளவில், கிரேஸி மோகன் எனக்கு கால் செய்தார். மூச்சுமுட்டுற மாதிரி இருக்கிறது, அடி வயிற்றில் வலிக்கிறது என கூறி வரச்சொன்னார். நான் உடனே அவர் வீட்டுக்கு சென்றேன். மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து காரில், அவரை கூட்டிக் கொண்டு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
டாக்டர்கள் தீவிரமாக முயற்சி செய்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் பெரிய அளவுக்கான ஹார்ட்அட்டாக் இருந்ததால், கிரேஸி மோகன் மரணமடைந்தார். டாக்டர்களை ஒரு குறையும் சொல்ல கூடாது என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
கிரேஸி மோகனுக்கு உடலில் வேறு எந்த பிரச்சினையும் இருந்தது கிடையாது. அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். நம்மை சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என முடிவு செய்துவிட்டு, அவர் கிளம்பி சென்றுவிட்டார். அவ்வளவுதான். நான் பிறகு விரிவாக பேசுகிறேன். இவ்வாறு மாது பாலாஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications