பட்டாசு வெடிக்கும் நாட்களில் சானிட்டைசர் பயன்படுத்தாதீங்க.. தீ கைக்கு பரவி விடும்.. உஷார் மக்களே!
சென்னை: சானிட்டைசர் பூசிய கைகளால் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
கொரோனா நோய் பரவல் காலத்தில் யாராவது வெளியே சென்று எதையாவது தொட்டால் உடனடியாக பாக்கெட்டில் உள்ள சானிடைசரை வைத்து கைகளில் பூசிக்கொண்டால் கிருமி அழிந்துவிடும். இவ்வாறு பலரும் செய்கிறார்கள். கையை கழுவுவது போல சானிட்டைசர் போட்டுக் கொள்வதும் ஒரு வாழ்வியல் பழக்கமாக மாறி விட்டது.

இந்த நிலையில்தான், பட்டாசு வெடிக்கும் போதும், மத்தாப்பூ உள்ளிட்ட பிற பட்டாசுகளை பயன்படுத்தும்போதும் கையில் சானிட்டைசர் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவத் துறை வல்லுனர்கள்.
ஏனெனில் சானிட்டைசர் சிறப்பாக செயல்படுவதற்காக அதில் ஆல்கஹால் கலக்கப்படுகிறது. ஆல்கஹால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஒரு பொருள். எனவே, கையில் சானிட்டைசர் போட்டுக் கொண்டு, நாம் நெருப்புடன் புழங்க நேரிடும் போது தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள். பட்டாசு வெடிக்கும் நாட்களில் மட்டும் சானிட்டைசருக்கு பதிலாக, கையில் நன்கு சோப்பு போட்டு கழுவி கொள்ளவும்.
சானிட்டைசர் கைகளில் படிந்து இருக்கும் என்பதால், அதை பயன்படுத்தி சில மணி நேரம் ஆகியிருந்தாலும், பட்டாசு வெடிக்க வேண்டாம். தீ பரவ வாய்ப்பு உண்டாம். எனவே, பட்டாசு வெடிக்கும் நாள் முழுக்கவே சோப்பு போட்டு மட்டும் கை கழுவுங்களேன்.
இதனிடையே, கையில் சானிடைசர் போட்டுக்கொண்டு தீபமேற்றுவது போன்று ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை அடிக்கடி பார்க்க முடிகிறது. இது போன்ற விளம்பரங்கள் மக்களிடம் அறியாமையை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
சானிட்டைசர் போட்டுக்கொண்டு பட்டாசு வெடிப்பது மட்டும் தவறு கிடையாது, விளக்கு ஏற்றுவதும் தவறுதான். எனவே, தீபாவளி நாளில் மக்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த தகவலை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாக கொண்டு சென்று சேர்த்துவிடுங்கள் மக்களே.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications