வதந்தியை நம்ப வேண்டாம்.. ஆல் பாஸ் எல்லாம் கிடையாது.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பளீர் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் 1- 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளியான செய்திகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் கொரோனா காரணமாக தேர்வுகள் நடக்கவில்லை. கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காத நிலையில் இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. 11, 12 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்.,25 தொடங்கியது. அதேபோல் 10ம் வகுப்பு செய்முறை தேர்வும் ஏப்.,25ல் தொடங்கியது.

தேர்வுகள் எப்போது
இது போக 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 10 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த நிலையில்தான் 1 முதல் 9ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை தெரிவித்ததாக பல்வேறு செய்திகள் வந்தன.

வதந்திகள்
அதாவது தமிழ்நாட்டில் 1- 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. புதுச்சேரியில் வெளியான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்ததாக பலர் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நிச்சயம் நடக்கும்
அனைவரும் ஆ ல் பாஸ் என்று வெளியான செய்தி தவறு.இறுதித்தேர்வு திட்டமிட்டப்படி மே 6ம் தேதி நடக்கும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6-9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும்.

விடுமுறை எப்போது
6-9ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கும் நிலையில் ஜுன் 13ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே இது தொடர்பாக வெளியான வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. 10 வகுப்பு பொதுத்தேர்வு மே 30ம் தேதி முடிய உள்ளதால் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications