டபுள் "அட்வான்ஸ்" குட் நியூஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு.. உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடி.. வந்தது அரசாணை
சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார்.
அரசு ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமானது முன்பணத் திட்டமாகும்..

அந்தவகையில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள்
கடந்த 1989ம் ஆண்டு எடுத்துக் கொண்டால், அரசு ஊழியர்களின் மகன் திருமணத்துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்லது மகள் திருமணத்துக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது. பிறகு கடந்த 1995ல் இந்த தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், ''அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்'' என அறிவித்திருந்தார்.
அரசாணை வெளிவந்தது
அதன்படியே, அரசு ஊழியர்களின் திருமணத்திற்காக வழங்கப்படும் திருமண முன்பணத்தை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பணி ஓய்வு பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு, இந்த திருமண முன்பணம் கிடைக்கும்.
திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த உதவித்தொகை விடுவிக்கப்படும். இது, 36 தவணைகளில் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
உதயச்சந்திரன் ஐஏஎஸ்
திருமண முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்... கணவன், மனைவி, பெற்றோர் அரசு ஊழியர்களாக இருப்பின், ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே முன்பணம் பெற முடியும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.
திருமண முன்பண உயர்வு தேவை என்பது அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், அது உயர்த்தப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வருகிறது.. இந்த பணம் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு திருமணத்தின்போது கை கொடுத்து உதவுவதுடன், நிதிப்பாதுகாப்பையும் நிச்சயம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டபுள் குட்நியூஸ்
அதுமட்டுமல்ல, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் நடப்பு ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்..
அதன்படி, தொழிற்கல்வியில் சேர ரூ.1 லட்சம் என்ற அளவிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் படிப்புகளில் உயர் கல்வியில் சேர ரூ.50 ஆயிரம் என்ற அளவிலும் கல்வி முன்பணம் உயர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் ஜூன் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அந்தவகையில், 2 வகையான அரசாணைகளையும், உடனுக்குடன் அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications