டபுள் டென்ஷனில் சத்தியமூர்த்தி பவன்.. யாரந்த கருப்பு ஆடு? செல்வப்பெருந்தகைக்கு ஜூன் 22ல் அறிவிப்பு?
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் படுதோல்விக்கு காரணமான துரோகிகளைக் கண்டுபிடிக்க உண்மை கண்டறியும் குழுவின் அதிரடி விசாரணை இன்று தொடங்குகிறது. மறுபக்கம், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படப் போகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் சத்தியமூர்த்தி பவனை அதிர வைத்துள்ளது... இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், டபுள் டென்ஷனில் சிக்கித் தவித்து வருகிறதாம் தமிழக காங்கிரஸ் கட்சி!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால், "அடுத்து என்ன நடக்குமோ?" என்ற பரபரப்புதான் தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தோல்வி
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் தோல்வி கிடைத்துள்ளது. போட்டியிட்ட 28 இடங்களில் வெறும் 5 இடங்களில் மட்டும்தான் காங்கிரஸ் வென்றது. இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி தலைமை, தேர்தல் தோல்விக்கு யார் காரணம், கட்சிக்குள் இருந்து கொண்டே துரோகம் செய்தது யார்? யாரந்த கருப்பு ஆடு? என்பதைக் கண்டுபிடிக்க டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு ரகசிய விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது, இன்று முதல் அதாவது ஜுன் 11ம் தேதி முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது விசாரணையை தொடங்குகிறது. முதல் கட்டமாக ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்க போகிறதாம்.. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்த குழு ஏற்கனவே கறாராக சொல்லிவிட்டது.
செல்வப்பெருந்தகை பதவி தப்புமா
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பதவி தப்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம், வரும் ஜூன் 18ம் தேதி செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த கல்யாணத்துக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனப் பலருக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்துள்ளார். மகள் திருமணம் நல்லபடியாக முடியட்டும் என்று டெல்லி தலைமை காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
திருமணம் முடிந்ததும், அதாவது ஜூன் 22ம் தேதியே செல்வப்பெருந்தகை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் மிகவும் உறுதியாக சொல்கின்றன.
விசாரணைக் குழுவின் அறிக்கை
ஆனால், இந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கும் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவதற்கும் சம்பந்தமில்லை என்று குழுவின் தலைவர் ஜெயக்குமார் ஒரு சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார்.
செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துக் கடிதம் கொடுத்திருந்தார். தனக்குச் சொந்த தொகுதிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதால், இந்த மாற்றம் அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நடப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுகவினர் செம கோபம்
இந்த உட்கட்சிப் பூசலுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் பின்னணியும் இருப்பததாக சொல்லப்படுகிறது.. அதாவது கடந்த தேர்தலின் போது திமுகவினர் காங்கிரஸை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்கள். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடியாக முடிவெடுத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு முதன்முதலாக ஆதரவு தந்தது.
இப்போது விஜய்யின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதனால் திமுகவினர் காங்கிரஸ் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவில்தான், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் துரோகிகளைக் கண்டுபிடிக்க இந்தக் குழுவின் விசாரணை இன்று முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது... அடுத்து என்ன நடக்க போகிறது என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications