சென்னையில் சோகம்.. 30 வயதான மகளுக்கு திருமணம் ஆகாததால் தந்தை தற்கொலை.. ஒரே வீட்டில் இரு உயிர்கள் பலி
சென்னை: வடபழனியில் மகளுக்கு 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை கிருஷ்ணகுமார் (57) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தந்தை இறந்த நிலையில் இருப்பதை கண்டு மனம் உடைந்த மகள் பாக்யா (30) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே வீட்டில் இரு உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). இவர் தனது இளைய மகள் பாக்யாவுக்கு 30 வயது ஆகியும் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் வீட்டின் பின்புறம் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து உயிரை விட்டுள்ளார்.

உயிரை மாய்த்துக் கொண்ட தந்தையின் உடலை பார்த்ததும் மகள் பாக்யாவும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து வடபழனி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வடபழனியில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தையும், தந்தை தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்து மகளும் உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications