டாக்டர் ராமதாஸை கரைத்து போட்ட பாடல்.. நீங்களும் கேளுங்கள்.. மனம் கனத்து போவீர்கள்!
டாக்டர் ராமதாஸ் கேரள பாடகரின் பாடல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சென்னை: இது பலருக்கு தெரிந்து இருக்கிறதோ இல்லையோ.. டாக்டர் ராமதாஸ் ஒரு நல்ல கலா ரசிகன்.. தனக்கு ஒரு பாட்டை ரொம்ப பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.
தமிழ், தமிழக மக்கள், பண்பாடு, கலாச்சாரத்தில் அதீத அக்கறை எடுத்து கொள்பவர் டாக்டர் ராமதாஸ்! இதைதவிர மண்ணையும், மக்களையும் பாதிக்கும் சமாச்சாரத்தையும் இடித்து சொல்லவும் தயங்க மாட்டார்.

ஆனால் காதல், சினிமா இது பற்றியெல்லாம் டாக்டரின் நிலைப்பாடு என்ன என்று நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் ராமதாசுக்கு ஒரு பாடல் ரொம்பவே பிடித்துவிட்டது.
கேரளத்தின் பிரபல பாடகர் தோழர் ரேஷ்மி சதீஷ் பாடிய சமூக நலன்மிக்க பாடல் அது. அந்த பாட்டை காயல்பட்டினத்தின் சிறந்த பாடகர்களுள் ஒருவரான கே.கே.சாஷுல் ஹமீது தமிழில் பாடியுள்ளார்.
இந்த பாட்டைதான் தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டு, "நான் பலமுறை கேட்டு ரசித்த இயற்கையையும்,
மனிதத்தையும் போற்றும் பாடல்! நீங்களும் கேட்டு மனிதத்தின் மகத்துவத்தை உணருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள்தான்!
நான் பலமுறை கேட்டு ரசித்த இயற்கையையும்,
— Dr S RAMADOSS (@drramadoss) May 1, 2019
மனிதத்தையும் போற்றும் பாடல்!
நீங்களும் கேட்டு மனிதத்தின் மகத்துவத்தை உணருங்கள்
https://t.co/rpSttn0hj6
அன்றங்கே ஒரு நாடிருந்ததே.. அந்நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே. மீனும் முழுகிடக் குளிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே.. வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே.. கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
அந்நாட்டில் நிழல் இருந்ததே.. மண் வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிசிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே
நல்ல மழை பெய்திருந்ததே.. நரகத்தீ சூடில்லையே
தீவட்டிக் கொள்ளை இல்லையே.. தின்றது எதுவும் நஞ்சில்லையே..
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வர பலருண்டங்கே
நாடெங்கும் மதில்கள் இல்லையே.. நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணி பூவிருந்ததே.. நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே
அன்றும் பல மதம் இருந்ததே.. அதையும் தாண்டி அன்பிருந்ததே
உன்னை படைதோன் என்னை படைத்தோன் என்றதொரு சண்டையில்லையே
அந்நாட்டைக் கண்டவர் உண்டோ.. எங்கே போனது தெளிவுண்டோ
அந்நாடு இறந்து போனதோ, அது வெறும் ஒரு கனவானதோ"
இதுதான் அந்த பாட்டும், பாட்டு வரிகளும். ஆனால் பாடலை பாடிய விதத்தை கேட்கும்போது நம்மை என்னவோ செய்கிறது.. எதையோ இழந்ததை மனம் தேடுகிறது.. எளிய நடை, இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவுஎன அனைத்துமே கலந்து இருக்கிறது இந்த பாட்டு! அதனால்தான் ராமதாசுக்கு பிடித்திருக்கிறது போலும்!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications