இதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி
காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது
Recommended Video
சென்னை: "நான் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை காடுவெட்டி குரு" என்று அடிக்கடி பெருமைபட சொல்லும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. குருவின் நினைவு மண்டபத்துக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்!
டாக்டர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பாமகவின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர்.. தனது அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் குரு.

பாமக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சரி, அந்த கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி போன்றோர் பங்கேற்றிருந்தாலும் சரி, அவர்களின் பேச்சுகளைவிட குருவின் பேச்சுக்கு கைதட்டல்களும், ஆரவாரங்களும் பெருகும். அப்படிப்பட்டவர் கடந்த மே மாதம் உயிரிழந்தது பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
பாட்டாளி சொந்தங்களே.....
— Dr S RAMADOSS (@drramadoss) September 16, 2019
நெஞ்சில் நிறைந்தவனுக்கு
நினைவு மண்டபம் திறப்பு:
இதயத்தின் ஆழத்திலிருந்து அழைக்கிறேன் நான்....
காடுவெட்டி கிராமத்தில் நாளை ஒன்று கூடுவோம்! pic.twitter.com/EHGWnO4qzA
"எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் காடுவெட்டி குருவின் மறைவு தான்" என்று ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இந்நிலையில், குருவுக்காக மணிமண்டபம் காடுவெட்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவனர் ராமதாஸ் திறந்து வைக்க இருக்கிறார். இதுகுறித்த ட்வீட் ஒன்றினையும் டாக்டர் பதிவிட்டுள்ளார்.
அதில், "பாட்டாளி சொந்தங்களே..... நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம் திறப்பு: இதயத்தின் ஆழத்திலிருந்து அழைக்கிறேன் நான்.... காடுவெட்டி கிராமத்தில் நாளை ஒன்று கூடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் ஒரு வீடியோவும் உள்ளது. அதில் குருவின் ஆரம்ப கால போட்டோக்கள், ராமதாசுடன் இணைந்து எடுத்து கொண்ட போட்டோக்கள், குருவின் முதல் பேச்சு போட்டோ, என அத்தனையும் இடம் பெற்றுள்ளது.
இன்றைய சூழலில், எத்தனையோ சலசலப்புகள் குருவின் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தாலும், அவரது குடும்பத்தினர் மத்தியில் இருந்தாலும் சரி.. தொண்டனுக்கு மணிமண்டபம் கட்டி மக்கள் தலைவராக ராமதாஸ் உயர்ந்து வருவதாகவே தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications