அடடடா.. இந்த விஷவாயு தொல்லை தாங்கலப்பா.. நக்கலடிக்கும் டாக்டர் ராமதாஸ்
வாயால் விஷவாயு பரப்புகிறார்கள் என்று டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: நடந்து வரும் சூழலுக்கும், நடந்து முடிந்த சமாச்சாரத்துக்கும் தக்க பதிலடி தர ஆரம்பிச்சிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
சூடு, சொரணை இல்லையான்னு மிக மிக தரக்குறைவான விமர்சன கருத்துகள் வெளிவந்து ஒரு வாரம் ஆக போகிறது. இதற்கு டாக்டர் என்றைக்கோ பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி ஒரு பதிலடி தந்தால் அது கண்டிப்பாக நறுக் தெறித்தாற்போலதான் இருக்கும் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் தொகுதி பங்கீடு, விருந்து சமாச்சாரத்தில் பிஸியாக இருந்தவர் இப்போது பதிலடியை ட்விட்டரில் தன் பாணியிலேயே அதாவது பொன்மொழிகளுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், ''அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்'' என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம். தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்!" என்று பதிவிட்டுள்ளார்.
‘‘அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்’’ என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம். தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 24, 2019
எதிர்பார்த்த அளவுக்கு காரசாரமான பதிலடி இது இல்லையென்றாலும், டாக்டர் யாரை, எதற்காக சொல்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் இடிக்கிறது.. கடந்த காலங்களில் இதே விஷ வாயுக்களுடன் ஒன்று கலந்து சுவாசித்ததை என்னவென்று சொல்வது?!!