கொரோனா: தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இதுபற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்! கொரோனா பரவலை தடுப்பதில் இரவும், பகலுமாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் பணி போற்றத்தக்கது. அவர்கள் அனைவருக்கும் மாலை 5.00 மணிக்கு கைகளைத் தட்டி நன்றி தெரிவிப்போம்.
தமிழ்நாட்டில் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், அதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களை சென்றடையாததால் வெள்ளிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் வாரச்சந்தைகள் நடைபெற்றுள்ளன. இது அரசு நடவடிக்கையின் நோக்கத்தையே சிதைத்து விட்டது! தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை வாரச்சந்தைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் பொறுப்பு ஆகும். சந்தை பொறுப்பாளர்களை அழைத்து பேசியும், மக்களுக்கு பொது அறிவிப்பின் மூலம் தகவல் தெரிவித்தும் வாரச்சந்தை தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இதுபற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்!#Covid19
— Dr S RAMADOSS (@drramadoss) March 22, 2020
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் மருத்துவத் துறையினருடன் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் காவல்துறையினரும் பணியாற்றுவது பாராட்டத்தக்கது. அவர்களுக்கு எமது வணக்கங்கள்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications