SIR பணிக்கு பிறகு.. புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. 85 ஆயிரம் பேர் நீக்கம்!
புதுவை: SIR பணிக்கு பிறகு புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் புதுவையில் 7.66 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்கள் (10 சதவீதம்) நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேர்தல் ஆணையம் மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) மேற்கொண்டது. ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்துள்ள பீகாரிலும் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகள் தெரிவித்தன. எனினும் தேர்தல் முடிந்து அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான எண்டிஏ கூட்டணி ஆட்சியை பிடித்தது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடந்த மாதம் 4 ஆம் தேதி இந்த பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வந்தது. வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று பூர்த்தி செய்து வந்தனர்.
பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இன்று சில மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான், புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் புதுவையில் மட்டும் 7.66 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது 10 சதவீதம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பெயர் விடுபட்ட வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர், போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏதுவாக பார்ம் வழங்கப்படும். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications