குடியரசுத் தலைவர் தேர்தல் 2022: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திரௌபதி முர்மு! என்ன செய்ய போகிறார்?
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தமிழிசை சவுந்திரராஜன், வெங்கைய நாயுடு உள்ளிட்டோர் மற்ற கட்சிகளுடன் இணக்கமான போக்கை கொண்டுள்ளார்கள்.

வேட்பாளர்
இதனால் அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர கூடும் என பாஜக கருதுவாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பாஜகவோ பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு வாய்ப்பை கொடுத்தது. கடந்த முறை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
திரௌபதி முர்முவுக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பாமக தமாக, பகுஜன் சமாஜ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அது போல் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியுள்ளனர்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்தவர். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவால் ஓரங்கட்டப்பட்டவர்களில் யஷ்வந்தும் ஒருவர். இவர் பிரதமர் மோடிக்கு போன் போட்டு தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவருக்கு திமுகவும் ஆதரவு கொடுத்துள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி
இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயணம் செய்து தனக்கு ஆதரவு கோர முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு செய்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திட்ட முர்மு திட்டமிட்டுள்ளார்.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
ஜூலை முதல் வாரத்தில் சென்னை வர திட்டமிட்டுள்ள முர்மு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கோரவுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். சமூகநீதி என்கிறீர்களே திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தாருங்கள் என தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் திமுக, யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு என கூறிவிட்ட நிலையில் முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா இல்லை மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது நிலைப்பாட்டை எடுத்துரைப்பாரா என்பது போக போகத் தான் தெரியும்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications