ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை முத்தமிட்டது காவிரி தண்ணீர்.. முதல் சோதனை வெற்றிகரம்
Recommended Video

சென்னை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் முதல் கட்ட சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. மேட்டுசக்கர குப்பத்தில் உள்ள தொட்டியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ரயில் நிலையம் அமைந்துள்ள பார்சம்பேட்டையை சென்றடைந்துள்ளது.
சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. , இத்திட்டத்திற்கு ரூ.65 கோடிநிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வந்தன. நேற்று இறுதிகட்ட பணிகள் நடந்தது. இதனால் நேற்றே சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவு பெறாததால் இன்று பிற்பகலில் தான் சோதனை ஓட்டம் தொடங்கியது.

ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை பம்பிங் செய்து சேமித்து வைக்கப்பட்டது. அந்த தண்ணீரை ரயில் நிலையத்தை ஒட்டிய பார்சம்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது தண்ணீர் பார்ச்சம்பேட்டையைச் சென்றடைந்தது. அங்கிருந்து சில மீட்டர் தூரம் தள்ளி உள்ள ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
பார்சம்பேட்டையில் இருந்து தண்ணீர் அங்கிருந்து 5-வது நடைமேடையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் நிரப்பட உள்ளது. எனவே வரும் ஜூலை 12-ம் தேதி அன்று சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைப்பார் என தெரிகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கம் வரும் தண்ணீர் அங்கிருந்து குழாய் மூலம் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
இதனிடையே ஜோலார்பேட்டை - சென்னைக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தேவைப்படின் கூடுதல் ரயில்கள் அனுமதிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை அளித்துள்ளார்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications