குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு!
சென்னை: 20 லிட்டர் கேன் விலை 5 ரூபாயும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 3 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம், உலகளாவிய பொருளாதாரத்தில் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. குறிப்பாக பெட்ரோலியம் சார்ந்த உற்பத்திகளில் ஒன்றான பிளாஸ்டிக் துறையில் விலை ஏற்றம் தீவிரமடைந்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தைகளில் ஏற்பட்டு வரும் தாக்கத்தை தொடர்ந்து பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக நேற்று பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்தன. எல்.பி.ஜி சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்ச உணர்விலே உள்ள மக்களுக்கு அடுத்து எந்த பொருட்களின் விலை உயருமோ என்ற பீதியும் நிலவுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வரும் நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் மினரல் குடிநீர் பாட்டில் விலை ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 20 லிட்டர் மினரல் வாட்டர் கேனின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சுத்திகரித்து, முறையாக அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக தண்ணீர் நிரப்பி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 1,840 அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த புதிய விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், "20 ஆண்டுகளாக அனைத்து சூழலையும் சமாளித்து விலையை ஏற்றாமல் தாக்குப்பிடித்தோம். தற்போது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் குடிநீர் கேன் விலை ஏற்றப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications