சென்னை கோடம்பாக்கம் அருகே சாலையில் நிலைத் தடுமாறி விழுந்த முதியவர் மரணம்.. சிசிடிவி வீடியோ
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநர் நரசிம்மன் சாலையில் நடந்து சென்ற போது நிலைத் தடுமாறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநராக உள்ளவர் நரசிம்மன். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. எனினும் அவர் சாக்கடையில் விழுந்து இறக்கவில்லை என மாநகராட்சி மறுப்பு தெரிவித்தது.

சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நரசிம்மன் மேற்கண்ட சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோடம்பாக்கம்
அதில் நரசிம்மன் கோடம்பாக்கம் மேம்பாலத்தையொட்டியுள்ள சர்வீஸ் சாலையில் ஜாக்கிரதையாக நடந்து வருகிறார். அப்போது அங்கு தண்ணீர் தேங்கியிருந்ததால் தண்ணீர் இல்லாத இடங்களில் கால் வைத்து நடந்து கொண்டிருந்தார்.

மாரடைப்பு
அப்போது திடீரென சாலையில் நிலைத்தடுமாறி விழுகிறார். உடனே பின்னால் வந்து கொண்டிருந்தவர் அவரை தூக்க முயற்சிக்கிறார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அவர் சாலையில் இடறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

பிரேத பரிசோதனை
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னரே நடந்தது என்ன என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications