Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணாவை சந்திக்க வாய்ப்பு இருக்கா? புழல் சிறை அதிகாரிகளிடம் நடிகர் ஸ்ரீகாந்த் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில் அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் தனித்தனி சிறையில் இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே செய்தித் தாள் படித்ததன் மூலம் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி அறிந்து, கிருஷ்ணா எங்கே இருக்கிறார்?.. அவரை சந்தித்து பேச முடியுமா? என சிறை அதிகாரிகளிடம் ஸ்ரீகாந்த் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடை செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Srikanth Actor Krishna cinema drug case

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் எனக்கு கொக்கைன் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது என்றும் மூன்று முறை அவர் எனக்கு கொடுத்தார் எனவும், நான்காவது முறை தானே கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மேலும் இந்த போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை 5 தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், நேற்று முன் தினம் அவர் நுங்கம்பாக்கம் போலீசில் ஆஜர் ஆனார்.

நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர் ஆன அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என வந்தது. ஆனால் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ரகசிய கோட் வேர்டு மூலமாக அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் மற்றவர்களுக்கும் சப்ளை செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோரை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜூலை 10 ஆம் தேதி வரை கிருஷ்ணாவை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணா நன்றாக தூங்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சிறையில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தினமும் புத்தகம் மற்றும் செய்தி தாள் படித்து வந்துள்ளார். அப்படித்தான் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்ட செய்தியையும் அவர் பார்த்து இருக்கிறார். உடனே அவர் சிறை அதிகாரிகளிடம் கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டு இருக்கிறார்? கிருஷ்ணாவை சந்தித்து பேச வேண்டும்.. பேச முடியுமா? என்று கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு சிறை அதிகாரிகள் கிருஷ்ணாவை பார்க்கவும், பேசவும் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டனர்.

சிறையில் உள்ள நூலகத்துக்கு சென்று ஸ்ரீகாந்த் புத்தகங்களையும் விரும்பி படித்து வருகிறாராம். நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவரும் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+