நள்ளிரவிலும் நகர முடியலையே.. பரனூர் சுங்கச்சாவடியில் 3 கிமீட்டர் நிற்கும் வாகனங்கள்! காரணம் இதுதான்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை - திருச்சியை இணைக்கும் முக்கிய வகையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தென்மாவட்ட மக்களுக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை பெரிதும் பயனளித்து வருகிறது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது காணப்படும்.
அதாவது சென்னையில் பணியாற்றும் பலரும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது தான் இதற்கு காரணமாகும். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை (நாளை) கிருஷ்ணர் ஜெயந்தி விடுமுறை என்பதால் ஏராளமானவர்கள் சென்னையை காலி செய்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்தது தான் இதற்கு காரணமாகும். இத்தகைய சூழலில் தான் இன்று காலை முதல் திடீரென்று பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை புதிய சாலை அமைக்கும் பணி என்பது நடந்து வருகிறது. இதனால் இன்று காலை முதலே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரமாகியும் கூட போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து வருகிறது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணிக்கும் பொதுமக்கள்பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சில ஆம்புலன்ஸ்களும் சிக்கின. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டன. இருப்பினும் பிற வாகனங்கள் வழிவிட்டதால் சிரமத்துக்கு நடுவே பரனூர் சுங்கச்சாவடியை கடந்து ஆம்புலன்ஸ்கள் சென்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications