சென்னையில் இன்று மின்தடை.. பெருங்களத்தூர், நொளம்பூர், சோத்துப்பாக்கம் மக்களே கவனம்
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலையில் பெருங்களத்தூர், நொளம்பூர், சோத்துப்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழகத்தில் மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

இந்த பராமரிப்பு பணியின்போது பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னையில் இன்று சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் தடைப்படஉள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 13.11.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
பெருங்களத்தூர்: மங்களா அபார்ட்மென்ட், செருஸ்டி வில்லா, ஜிகேஎம் காலேஜ் ரோடு, ஜெட் வாட்டர், கேகே நகர், பெருமாள்புரம், சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மென்ட் மற்றும் எஸ்வி வார்ம்ஸ் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
நொளம்பூர்: எஸ்பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் பகுதி, குருசாமி சாலை, நெளம்பூர் கட்டம் I & II, யூனியன் சாலை, விஜிஎன் நகர் 1 முதல் 4 வரை, 1வது, 2வது, 3வது, 4வது, வது, 6வது மற்றும் 8 வது பிளாக், கம்பர் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டிபாளையம் அவென்யூ, எம்சிகே லே அவுட், எம்ஜிஆர் பல்கலைக்கழகம், பாணன் சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சோத்துப்பாக்கம்: பாலாஜி கார்டன், புதுநகர், பைபாஸ் ரோடு, அருண் உல்லாச சிட்டி, சாந்தி காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications