துல்ஹஜ் பிறை தெரிந்தது.. 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை.. தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், நாகூர், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துல்ஹஜ் மாத பிறை தென்பட்டதையடுத்து வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பக்ரீத் என்பது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது.

'ஈத் அல்-அதா' என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், நாகூர், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துல் ஹஜ் மாத பிறை தென்பட்டது. பிறை தென்பட்டதை அடுத்து தலைமை காஜி, வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications