“ரொம்ப கவனமா இருக்கனும்”.. திருமாவளவனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கே சென்று துரை வைகோ அட்வைஸ்
சென்னை: காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தமிழ்நாடு திரும்பினார். டெல்லியில் இருந்து வந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனை அடுத்து 30 ஆம் தேதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க வரவேண்டாம் என அக்கட்சி அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திருமாவளவன் உடல் நலம்பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தனியார் மருத்துவமனைக்கு சென்று திருமாவளவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பு.. தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன்.
அயராத அரசியல் பயணத்திற்கு இடையே தங்களின் உடல் நலத்தையும் பேண வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே தங்களிடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களிடமும் பலமுறை இது பற்றி கூறியுள்ளேன் என்றதும், ஆமாம்.. தம்பி ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார் என்று உடன் இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டி ஆமோதித்தார்.

தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் நிலையில் அண்ணனை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இயன்றவரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத நிலையில் சந்திக்க வரும் பார்வையாளர்கள் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அண்ணனிடமும், மருத்துவரிடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களிடமும் கேட்டுக்கொண்டேன்.
ஏனென்றால் இதுபோன்ற சூழலில் பார்வையாளர்கள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு மேலும் பலவீனப்படுத்தி விடும் என்ற அக்கறையுடனும் கவலையுடனும் கேட்டுக் கொண்டேன். விரைவில் பூரண நலமடைந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்றும், அவ்வப்போது சீரான ஓய்வும், உறக்கமும் தேவை என்று அண்ணனிடம் கூறிவிட்டு விடைபெற்றேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications