அண்ணாவே மிரண்ட பேனா.. கருணாநிதியின் பேனா குறித்து கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்? துரைமுருகன் கேள்வி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குறித்து கைநாட்டுகளுக்கு என்ன தெரியும் என அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சாதாரண பேனா அல்ல, அறிஞர் அண்ணாவே மிரண்டு போன பேனா, அந்த பேனாவை பற்றி கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்? என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் ரூ 81 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதல் கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்தது சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேனா சின்னத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சி
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவு சின்னத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் வைக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. கருணாநிதியின் சமாதி அருகே வைத்துக் கொள்ளட்டும்.

கடலுக்குள் வேண்டாம்
ஆனால் கடலுக்குள் வேண்டாம் என்கிறோம். பேனா சிலை வைத்தால் கடலில் மாசு ஏற்படும். கடல் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த சிலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டு செல்வார்கள். இது கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

திருவள்ளுவர் சிலை
குமரி கடலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது என்றால் அங்கு ஏற்கெனவே இருந்த பாறையில் வைக்கப்பட்டது. ஆனால் பேனா சிலையை வைக்க ஏராளமான மணல், கற்கள் கொட்டப்பட்டு அதன் மேல் சிலை வைக்கப்படுகிறது. எனவே எதிர்ப்பை மீறி பேனாவுக்கு சிலை வைத்தால் அதை உடைப்பேன் என காட்டமாக கூறியிருந்தார். இதற்காக சீமானுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

பேனா சிலைக்கு எதிர்ப்பு
அது போல் பேனா சிலைக்கு அதிமுகவும் , பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி கலைஞருக்கு பேனா சிலை வைக்கட்டும், அதை அண்ணா அறிவாலயத்தில் வைக்கட்டும், யார் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கடலுக்குள் வைப்பதைத்தான் அனைவரும் எதிர்க்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன்
இந்த நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் கருணாநிதியின் பேனா சாதாரண பேனா அல்ல. அண்ணாவே பார்த்து மிரண்டு போன பேனா.

ஆற்றல் மிக்க முதல்வர்
அந்த பேனாவை பற்றி கைநாட்டுக்கு என்ன தெரியும்? இந்த பேனாவிற்கு உயிரோட்டம் உள்ளது. அந்த பேனாவை நிறுத்தி காட்டுவோம். கருணாநிதியை மிஞ்சக் கூடிய ஆற்றல் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது. இந்தியாவே பாராட்டும் வகையில் அடிபணிகிற முதல்வராக எதிர்காலத்தில் வருவார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications