அண்ணாவே மிரண்ட பேனா.. கருணாநிதியின் பேனா குறித்து கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்? துரைமுருகன் கேள்வி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குறித்து கைநாட்டுகளுக்கு என்ன தெரியும் என அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சாதாரண பேனா அல்ல, அறிஞர் அண்ணாவே மிரண்டு போன பேனா, அந்த பேனாவை பற்றி கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்? என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் ரூ 81 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதல் கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்தது சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேனா சின்னத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சி
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவு சின்னத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் வைக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. கருணாநிதியின் சமாதி அருகே வைத்துக் கொள்ளட்டும்.

கடலுக்குள் வேண்டாம்
ஆனால் கடலுக்குள் வேண்டாம் என்கிறோம். பேனா சிலை வைத்தால் கடலில் மாசு ஏற்படும். கடல் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த சிலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டு செல்வார்கள். இது கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

திருவள்ளுவர் சிலை
குமரி கடலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது என்றால் அங்கு ஏற்கெனவே இருந்த பாறையில் வைக்கப்பட்டது. ஆனால் பேனா சிலையை வைக்க ஏராளமான மணல், கற்கள் கொட்டப்பட்டு அதன் மேல் சிலை வைக்கப்படுகிறது. எனவே எதிர்ப்பை மீறி பேனாவுக்கு சிலை வைத்தால் அதை உடைப்பேன் என காட்டமாக கூறியிருந்தார். இதற்காக சீமானுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

பேனா சிலைக்கு எதிர்ப்பு
அது போல் பேனா சிலைக்கு அதிமுகவும் , பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி கலைஞருக்கு பேனா சிலை வைக்கட்டும், அதை அண்ணா அறிவாலயத்தில் வைக்கட்டும், யார் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கடலுக்குள் வைப்பதைத்தான் அனைவரும் எதிர்க்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன்
இந்த நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் கருணாநிதியின் பேனா சாதாரண பேனா அல்ல. அண்ணாவே பார்த்து மிரண்டு போன பேனா.

ஆற்றல் மிக்க முதல்வர்
அந்த பேனாவை பற்றி கைநாட்டுக்கு என்ன தெரியும்? இந்த பேனாவிற்கு உயிரோட்டம் உள்ளது. அந்த பேனாவை நிறுத்தி காட்டுவோம். கருணாநிதியை மிஞ்சக் கூடிய ஆற்றல் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது. இந்தியாவே பாராட்டும் வகையில் அடிபணிகிற முதல்வராக எதிர்காலத்தில் வருவார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications