தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் அரசு பேருந்துகளில் இ டிக்கெட் அறிமுகம்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்!
சென்னை: தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் இ டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்கும் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக இ டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்துகளில் டிக்கெட் பெறலாம். மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.

புதிய ஸ்மார்ட் கார்டு
புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை மாணவ மாணவிகளுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டு இருந்த பழைய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிக்கல்
பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும். பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் விடுப்பில் இருப்பதால்தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்விற்கு பின்னர் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளார்கள்.

ஓய்வூதிய பலன்கள்
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய பலன்களை கொடுப்பதில் தாமதம் செய்ததால்தான் தற்போது வரை இந்த தாமதம் நீடித்து வருகிறது. போக்குவரத்து துறை ரூ 43000 கோடி கடனில் இருக்கிறது. இது மெல்ல மெல்ல சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்பயா திட்டம்
போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் பதவியேற்றதிலிருந்து பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், பயணிகள் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின் கீழ் நிறைய விஷயங்களை செய்து வருவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம், அவசர அழைப்பு பொத்தான் பொருத்தும் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 500 பேருந்துகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications