Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் உடலை வட்டமிட்ட கருடன்! ஆண்டாள் அடியேனை நேரில் வந்து சொர்க்கத்திற்கு அழைத்த பெருமாள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களால் போற்றப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே தேமுதிக தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தனர்.

 Eagles circled for 3 times around Captain Vijayakanths body

இதையடுத்து அவரது இறப்பை அறிந்ததும் பலர் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீடு, கட்சி அலுவலகத்தில் சாரை சாரையாக குழுமினர். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து பொதுமக்கள், தொண்டர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்திற்கு பல்வேறு ரசிகர்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் அடுத்த நாளான 29 ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பேருந்துகள், லாரிகள், டெம்போக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருடன் தொண்டர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கோயம்பேடே திணறியது. பின்னர் அரசுடன் ஆலோசனை நடத்தி விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலு்தினர். இதையடுத்து அவருடைய இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது.

பூந்தேரில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுகிலும் கூட்டம் கூட்டமாக நின்றிருந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேம்பாலங்கள், உயர்ந்த கட்டடங்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டு பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு பிரேமலதா, மகன்கள் ஆகியோர் கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.

வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் கண்ணீல் மல்க நின்றுக் கொண்டு இறுதியாக பயணித்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில்தான் அவருடைய உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடக்கும் போது வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன. அவருடைய உடலுக்கு 3 முறை வட்டமிட்ட கருடனை பார்த்து அங்கிருந்தோர் மெய்சிலிர்த்தனர். உடனே பிரேமலதா உள்ளிட்டோர் கருடனை கும்பிட்டனர்.

கருடன் வட்டமிடுவது ஏன்? பொதுவாக கருடன் கும்பாபிஷேகம் மற்றும் ஆன்மிகவாதிகளின் மரணங்களின் போது வட்டமிடும். இது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வாகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு விஜயகாந்துக்கு நடந்துள்ளதை வைத்து பார்க்கும் போது அவர் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

கள்ளழகர் படத்தில் நடித்த விஜயகாந்துக்கு ஆண்டாள் என்றால் மிகவும் பிடிக்கும். மதுரைக்கு சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் தங்க முலாம் பூச தங்கத்தை அன்பளிப்பாக விஜயகாந்த் கொடுத்துள்ளார். அத்துடன் விஜயகாந்தின் கல்லூரிக்கு ஆண்டாள் அழகர் என்றுதான் பெயர்.

மார்கழி மாதத்தில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். தற்போது விஜயகாந்தை கருடன் வட்டமிட்டதால் பெருமாளே நேரில் வந்து விஜயகாந்தை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதாகவே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+