இந்த பக்கம் வாங்க.. அந்த பக்கம் கரண்ட் ஷாக் அடிக்குது.. மேற்கு மாம்பலத்தில் மின் ஊழியர் வார்னிங்!
சென்னை: மேற்கு மாம்பலம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள சாலையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதால் மின் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு கருதி ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்.
Recommended Video
சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மாம்பலம், கிண்டி, தி நகர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீர் தேசமாக காட்சியளிக்கிறது.
சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சேங்கியுள்ளதால் மேடு, பள்ளம் தெரியாத அளவுக்கு உள்ளது. தண்ணீரில் நீந்தி வெளியே வர அஞ்சி பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

வடதமிழகம்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சிக்கே இந்த நிலை என்றால் இன்னும் வடதமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை எப்படி வெளுத்து வாங்குமோ என்ற அச்சம் இப்போதே சென்னைவாசிகளை தொற்றிக் கொண்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மக்கள் வேதனை
இதனால் மின்சாதன பொருட்கள் பழுதாகியுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் சென்னையின் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் பூச்சி உள்ளிட்ட ஊர்வனவைகளுக்கு அஞ்சி வாழும் சூழல் எழுந்துள்ளது.

சென்னையில்
இந்த கனமழை சென்னையில் இரு தினங்களுக்கு மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் தண்ணீரை ராட்சத மோட்டார் வைத்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய
மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் சாலையில் ஒரு மின்வாரிய பெட்டியின் அடியில் இருந்து புகை வருகிறது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி மின் வாரிய ஊழியர்கள் ஒருவர் எதிர்திசையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகிறார். இதை சரி செய்யவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications