தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கு... ஹைகோர்ட் கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கொலை வழக்கு பதியலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தியதற்காக ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது. தேர்தல் நேரத்தில் கொரோனா விதிமீறலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நேரத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்தியதால் கொரோனா மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது. இரண்டாம் அலையால் மக்கள் கொத்து கொத்தாக மடிய ஆரம்பித்துள்ளனர். இன்றைய கொரோனா பரவலின் அதீத பாதிப்புக்கு காரணம் சட்டசபைத் தேர்தலும் அரசியல்வாதிகளின் பிரசாரம்தான்.

2000ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என்று வழக்கு விசாரணை ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியானது. உயர் நீதிமன்றம் வாய்மொழியாக தெரித்ததை செய்தியாக வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார்.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், நீதிமன்ற நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் வாய்மொழி வழியான விசாரணைகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுகளை அல்லது தீர்ப்புகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியது.
தேர்தல் ஆணையத்தின் மீது கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை கோரி போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார். இந்த சர்ச்சைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு நீதிமன்றம் இருக்கிறது. ஏதேனும் அற்பமான புகார்கள் வந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தது.
இதனிடையே தேர்தல் ஆணையம் மீது சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தியதற்காக ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது. தேர்தல் நேரத்தில் கொரோனா விதிமீறலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications