நேற்று அரசியல்வாதிகள்.. இன்று ஐடி, அமலாக்க துறை அதிகாரிகள்.. சென்னையில் பரபரக்கும் தேர்தல் ஆணையர்!
சென்னை: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன.

தேசியளவில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஒரு பக்கமும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மறுபுறமும் களமிறங்குகிறது. தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் ஆரம்பித்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஆலோசனை: இந்தச் சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இப்போது சென்னை வந்துள்ளார். லோக்சபா தேர்தலைச் சுமுகமாக நடத்துவது குறித்து அவர் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில், இப்போது இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனைகளை நடத்தினர். அவர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து பிற்பகலில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனையை வழங்கினர்.
இரண்டாவது நாள்: இந்தச் சூழலில் தான் இரண்டாம் நாளாக இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், அம்மாநில காவல்துறை அதிகாரிகளுடன் பங்கேற்று உள்ளனர். அவர்கள் தங்கள் மாநிலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை தர உள்ளனர்.
தொடர்ந்து இன்று மதியம் வருமான வரித்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது அதன் பிறகு கடைசியாகத் தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடக்கிறது இதில் லோக்சபா தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்தே ஆலோசிக்கப்படுகிறது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications